இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் கொண்டாடப்படவுள்ளது. ஜனநாயகம், மதச் சார்பின்மை, சுயசார்பு ஆகிய விழுமியங்க ளோடு கூட்டாட்சித் தத்துவம் என்ற வலுவான கட்டமைப்பை நம்முடைய இந்திய அரசியல் சட்டம் கொண்டுள்ளது. ஆனால் ஒன்றிய பாஜக கூட்டணி அரசு கூட்டாட்சித் தத்துவத்தின் மீது தொடர்ந்து கொலை வாளை வீசி வருகிறது.
இதன் ஒரு பகுதிதான் ஒன்றிய அரசு அகில இந்திய ஆட்சிப்பணி விதிகள் 1954ல் செய்ய உத்தே சிக்கப்பட்டுள்ள திருத்தங்கள் ஆகும். இந்த திருத் தத்தின்படி மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை எந்த நேரமும் ஒன்றிய ஆட்சிப்பணிக்கு திரும்ப அழைத்துக் கொள்ள முடியும்.
இந்தத் திருத்தம் செய்யும் முடிவைக் கைவிட வேண்டுமென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். பல்வேறு மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஒன்றிய அரசு ஏற்கெனவே மாநிலங்களின் அதி காரங்களைப் பறித்து ஒன்றிய அளவில் அதிகாரக் குவிப்பை அரங்கேற்றி வருகிறது. ஒன்றிய அரசு உத் தேசித்துள்ள திருத்தம் ஐஏஎஸ் அதிகாரிகளின் பணித்திறனைப் பாதிக்கும். மாநில அரசுகளின் பணியை முனைப்புடன் மேற்கொள்வதில் சுணக் கம் ஏற்படுத்தும். மாநில அரசுகளின் கருத்தோட் டத்தின் அடிப்படையில் செயல்படுவதற்கு மாறாக எந்த நேரமும் பணிமாற்றம் ஏற்படலாம் என்ற அச்ச உணர்வுடன்தான் பணியாற்ற வேண்டியிருக்கும்.
ஒன்றிய அரசு தன்னுடைய பணிகளுக்கு வெளிச் சந்தையிலிருந்து வல்லுநர்கள் என்ற பெயரில் ஆட்களை தேர்வு செய்து கொள்கிறது. இதன்மூலம் ஆர்எஸ்எஸ் கருத்தோட்டம் உள்ளவர்கள், ‘வல்லுநர்கள்’ என்ற பெயரில் ஆட்சிப் பணியில் ஊடுருவ வழிவகுக்கப்படுகிறது.
ஆனால் மாநில அரசுகள் முதன்மை பணிக ளுக்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பல மாநிலங்களில் போதுமான எண்ணிக்கையில் இந்தியப் பணி ஆட்சி யாளர்கள் இல்லை என்ற நிலை நிலவுகிறது.
உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தம் மாநில அரசுகளின் ஒப்புதலின்றி ஐஏஎஸ் அதிகாரிகளை ஒன்றியப் பணிக்கு மாற்ற வழி செய்கிறது. இத னால் ஐஏஎஸ் அதிகாரிகளின் சுயேச்சையான பணித் தன்மை பாதிக்கப்படும். ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கேற்ப செயல்படக்கூடிய சூழல் திணிக்கப்படும்.
மாநிலங்களுக்கு இடையே சர்ச்சைகள் எழும் போது அந்தந்த மாநிலங்களில் பணியாற்றும் தலைமைச் செயலாளர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் அந்தந்த மாநில அரசுகள் மற்றும் மக்களின் நலனுக்கேற்ப முடிவெடுத்து செயல்படுகிறார்கள். இத்தகைய நிர்வாக ஏற்பாட்டை சீர்குலைக்க மோடி அரசு முடிவு செய்துள்ளது. அதிகாரக் குவிப்பிற்கு வழிவகுக்கும் இந்த முடிவு மாநிலங்களின் அதிகாரத்தைப் பறிக்க நடக்கும் ஏற்பாடாகும். மாநிலங்கள் என்ற அமைப்பை பலவீனப்படுத்தும் இந்த முடிவை எதிர்க்க வேண்டியது அனைவரது கடமையு மாகும்.