headlines

img

மக்கள் தொகை கணக்கெடுப்பு: மறுப்பதன் மர்மம் என்ன?

பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படையிலான கடமைகளில் ஒன்று. நாடு முழுவதும் ஒன்றிய அரசுதான் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ஆனால், கொரோனா நோய்த் தொற்றை காரணம் காட்டி, 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்டிருக்க வேண்டிய கணக்கெடுப்பை ஒன்றிய பாஜக கூட்டணி அரசு தள்ளிவைத்தது. கொரோனா நோய்த் தொற்று அபாயம் நீங்கிய பிறகும், மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்து வதற்கான எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. 

மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் புள்ளிவிபர சேகரிப்பு மட்டுமல்ல. மக்களின் சமூக  பொருளாதார பண்பாட்டு வாழ்நிலை, பாலின  நிகர்நிலை, விவசாயம், தொழில், சிறு-குறு தொழில்கள், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களின் விபரங்களை அறிவது என்பது திட்டங்களை உருவாக்க உதவும். மோடி அரசைப் பொறுத்தவரை கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காகவே சட்டங்களையும், திட்டங்களையும் உருவாக்கு வதால் மக்கள் தொகையைப் பற்றி என்ன கவலை என்று கருதுகிறார்கள் போலும்.

பட்டியலின மற்றும் பழங்குடி மக்களின் விகி தாச்சாரத்திற்கு ஏற்ப, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. அந்த விகிதாச்சாரத்தை உயர்த்த வேண்டும் என்ற நியாயமான கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள், திரு நர்கள் உள்ளிட்ட பிரிவினரின் எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டால்தான் அதற்கேற்ப அவர்களுக்கான திட்டங்களை உருவாக்க முடியும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டு மென்பது நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்த லில் ஒரு முக்கிய விவாதப் பொருளாக இருந்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பால் இயக்கப்படும் பாஜக வுக்கு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் ஏற்பில்லை. இன்னும் சொல்லப் போனால், சாதிவாரியான இடஒதுக்கீட்டையே ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருதும் கூட்டம் அது. முறையான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் சிறுபான்மை மக்கள் குறித்த பொய்யான புள்ளி விபரங்களை சங்பரி வாரம் பரப்பிவருகிறது. ஆனால், சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்.

ஒன்றிய அரசுதான் ஒட்டுமொத்த மக்கள் தொகை மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியும். மாநில அரசுகள் நடத்த வேண்டு மென சிலர் குறுக்குச்சால் ஓட்டுவது பொருத்த மானது அல்ல. எனவே, மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக துவக்க ஒன்றிய அரசு முன்வர வேண்டும். அதற்கான அழுத் தத்தை அனைத்துத் தரப்பினரும் தர வேண்டும்.