games

img

ஆசிய பேட்மிண்டன் போட்டி: அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து  

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறினார்.  

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து, சீனாவின் ஹீ பிங் ஜியாவோவை எதிர்கொண்டார்.  இந்த ஆட்டத்தில் முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பற்றினார். இரண்டாவது செட்டை ஹி பிங் ஜியாவோ கைப்பற்றினார். இதனை தொடர்ந்து பரபரப்பான 3 வது செட்டை சிறப்பாக விளையாடிய சிந்து 21-19 என கைப்பற்றினார்.    

ஒரு மணிநேரம் 16 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தில் 3-வது நிலை வீராங்கனையான ஹி பிங் ஜியாவோவை 21-9, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் அனைவரும் வெளியேறிவிட்ட நிலையில், பி.வி.சிந்து மட்டுமே இந்தியா சார்பில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

;