games

img

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் அரையிறுதியில் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா

11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தயாராகிக் கொண்டி ருக்கும் பிரக்ஞானந்தாவுக்கு (16 வயது) செஸ் விளையாட்டு மூலம் கிடைக்கும்  பரிசுத்தொகை ஒவ்வொரு ஆண்டும் ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. கடந்த ஆண்டு 2.72 லட்சம் ரூபாய் சம்பாதித்த பிரக்ஞானந்தா நடப்பாண்டின் பாதிக்கட்டத்திலேயே ரூ.7.99 லட்சம் பரிசுத்தொகை வென்றுள்ளார். கடந்த ஆண்டை விட  50% கூடுதலாக வருமானத்தை ஈட்டியுள்ளார்.  (குறிப்பு : விளம்பர  வருவாய் போன்ற தகவல் இல்லாமல் பரிசுத்தொகை குறிப்பிடப் பட்டுள்ளது)

செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் தொடர் இணையம் வழியாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழ்நாட்டின் பிரக்ஞானந்தா, சீனா வெய் யியை 2.5-1.5 என்ற புள்ளிக்கணக்கில்  வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.  அரையிறுதியில் நெதர்லாந்து நாட்டின் அனிஷ் கிரியை எதிர்கொள்கிறார் பிரக்ஞானந்தா. உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சன் 2-வது அரை யிறுதியில் சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்கிறார். செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் தொடரின் தொடக்க ஆட்டத்திலேயே பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

;