17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் மாதம் தொடங்கு கிறது. இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் மற்றும் வீரர்கள் பரிமாற்றம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் நிறைவு பெற்ற நிலையில், ஐபிஎல் தொடரின் நட்சத்திர அணிகளில் ஒன் றான மும்பை அணிக்கு 5 முறை கோப்பை வென்று கொடுத்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நீக்கப் பட்டு (கேப்டன் பதவியில் மட்டும்) குஜ ராத் அணியின் கேப்டனாக இருந்த இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண் டர் ஹர்திக் பாண்டியா கடும் இழு வைக்கு இடையே மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த விவகாரத்திற்கு மும்பை ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, அந்த அணி யின் கொடியை எரித்தும், சமூக வலைத்தளங்களில் மும்பை அணியை அன்பாலோவும் செய்தனர்.
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன் மும்பை அணியின் பயிற்சியாளரும், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் விக்கெட் கீப்பருமான மார்க் பவுச்சர், “கடைசி 2 சீசன்களாக ரோகித் சர்மா ஒழுங்காக பேட்டிங்கில் செய்யாத கார ணத்தினால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து கழற்றி விடப்பட்டார். ஆனால் கேப்டனாக நன்றாகவே வழி நடத்தினார் என்றாலும், ரோகித் சர்மா இன்னும் அவரது பேட்டிங்கில் முன்னேற்றம் காண வேண்டும்” எனக் கூறினார்.
இதற்கு ரோகித் சர்மா எவ்வித கருத்தும் தெரிவிக்காத நிலையில், அவ ரது மனைவி ரித்திகா,”இதில் பல விஷ யங்கள் தவறு” என ஒரே ஒரு சொற்றொ டரில் கண்டனம் தெரிவித்தார். ரித்திகா போல கிரிக்கெட் ரசிகர்கள், நெட்டிசன் கள் என பல்வேறு தரப்பினரும் கண்ட னம் தெரிவித்துளள்னர்.
ஒன்றரை மாத பயிற்சிக்கு இந்திய கேப்டனை அவமதிக்கலாமா?
ஐபிஎல் தொடர் என்பது ஒன்றரை மாதம் நடைபெறும் தொடராகும். தொடர் தொடங்கும் 2 நாட்களுக்கு முன் னர் தான் அனைத்து வீரர்களும் முகா மிற்கு வருவார்கள். ஐபிஎல் தொடர் நிறைவு பெறும் வரை ஒன்றரை மாதம் மட்டுமே பயிற்சியாளர்கள் பயிற்சி அளிப்பார். ஐபிஎல் தொடர் நிறைவு பெற்ற பின் அவ்வளவுதான். அடுத்து எனது ஐபிஎல் வீரர்கள் என்ற வார்த்தை கூட உச்சரிக்க முடியாது. ஆனால் மார்க் பவுச்சர் என்னவோ ஆண்டுக் கணக்கில் ரோகித் சர்மாவிற்கு பயிற்சி அளித்தது போன்றோ? அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் அல்லது தேர்வு குழுவினர் போன்றோ பேசியுள்ளார். இது சரியானது அல்ல.