கிளப் உலகக்கோப்பை கால்பந்து 2025 நாக் அவுட் சுற்றில் மோன்டெர்ரி
சர்வதேச கால்பந்து சம்மேள னத்தால் நடத்தப்படும் கிளப் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் 21ஆவது சீசன் அமெரிக்காவில் ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த தொடர் நடுக்கட்ட த்தை தாண்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அதி காலை நடைபெற்ற “குரூப் இ” பிரிவு லீக் ஆட்டத்தில் மோன்டெர்ரி (மெக்சி கோ) - உரவா ரெட்ஸ் (ஜப்பான்) அணி கள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய மோன்டெர்ரி அணி 4-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது. “குரூப் இ” பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் இன்டர் மிலன் (இத்தாலி) அணி ரிவர் பிளேட் (அர்ஜெண்டினா) அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் இன்டர் மிலன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற் றது. மேலும் புள்ளிகள் அடிப்படையில் இன்டர் மிலன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. டார்ட்மண்ட் கலக்கல் “குரூப் எப்” பிரிவு லீக் ஆட்டத்தில் ஜெர்மன் கிளப் அணியான போருசியா டார்ட்மண்ட் அணி தென் கொரியா கிளப் அணியான உல்சானை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. “குரூப் எப்” பிரிவின் மற்றொரு லீக் ஆட்டத்தில் மாமெலோடி சன்டவுன்ஸ் (தென் ஆப்பிரிக்கா) - ப்ளுமினென்ஸ் (பிரேசில்) அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் நிறைவடைந்தது. எனினும் ப்ளுமினென்ஸ் அணி புள்ளிகள் அடிப்படையில் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றது.
இதுவரை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய அணிகள்
1. பால்மீராஸ் (பிரேசில்)
2. பென்பிகா (போர்ச்சுக்கல்)
3. போட்டாபோகோ (பிரேசில்)
4. செல்சி (இங்கிலாந்து)
5. பிஎஸ்ஜி (பிரான்ஸ்)
6. இன்டர் மியாமி (அமெரிக்கா - மெஸ்ஸி விளையாடும் அணி)
7. பிளமிங்கோ (பிரேசில்)
8. பேயர்ன் மூனிச் (ஜெர்மனி)
9. ப்ளுமினென்ஸ் (பிரேசில்)
10. மோன்டெர்ரி (மெக்சிகோ)
11. டார்ட்மண்ட் (ஜெர்மனி)
12. இன்டர் மிலன் (இத்தாலி)
(மொத்தம் 16 அணிகள் என்ற நிலையில், இன்னும் 4 அணிகள் பாக்கி உள்ளன)
4 நாட்களாக டிரெண்டிங்கில் கலக்கும் சுட்டிக் குழந்தை
5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றாலும், ஒரே சம்பவம் கடந்த 4 நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கடைசி நாளில் (ஜூன் 24) போட்டி பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதி ஒன்று தனது குழந்தையுடன் போட்டியை பார்க்க வந்தது. ரசிகர்களின் ஆரவாரத்தில் இருந்து தப்பிக்க குழந்தைக்கு தம்பதியினர் “ஹெட் போன் (சத்தம் கேட்கா மல் இருக்கும் வசதி கொண்டது)” மாட்டிவிட்டனர். மைதானத்தில் என்ன நடக்கிறது என்று குழந்தைக்கு தெரியாது என்றாலும், குழந்தை பெரியவர்களை போன்று போட்டி கூர்மையான பார்வையுடன் ரசித்தது. பந்து நகரும் திசையை திரும்பி திரும்பி பார்த்தது. இதனை சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்த நிலையில், இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் கடந்த 4 நாட்களாக டிரெண்டிங் ஆகி வருகிறது. ஆனாலும் இதில் சோகமான விசயம் என்னவென்றால் போட்டியில் தங்கள் நாடு வெற்றி பெற்ற போது குழந்தை தூங்கிவிட்டது. ரொம்ப டயர்ட் (சோர்வு) ஆகிடுச்சு பாவம்...