games

img

ரோஹித் சர்மா அபார சதம்: இந்திய அணி நிதான ஆட்டம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரே லிய கிரிக்கெட் அணி பார்டர் - கவாஸ்கர் டிராபி என்ற பெயரில் 4 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளை கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த சுற்றுப்பய ணத்தின் தொடக்க நிகழ்வான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்ஆட்டம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வியாழனன்று தொடங்கியது.  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஜடேஜாவின் (5 விக்.,) அபார பந்துவீச்சால் சீட்டுக்கட்டாய் சிதறி முதல் இன்னிங்சில் 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தனது முதல்  இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்தது.  வெள்ளியன்று தொடர்ந்து 2-வது நாள் ஆட்டம் நடை பெற்றது. 2-வது நாளின் தொடக்க சீசனி லேயே ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் முர்பியின் (5 விக்.,) பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய இந்திய அணி 168 ரன்களில் மிடில் ஆர்டரை இழந்தது.

கேப்டன் ரோஹித் ஷர்மா மட்டும் நிதான வேகத்தில் ரன்  குவிக்க மற்ற மிடில் ஆர்டர் வீரர்கள் 30  ரன்களை கூட தொடாமல் பெவிலியன் திரும்பினர். பின்னர் ரோஹித் சர்மா வுடன் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஜோடி சேர்ந்து, இருவரும் ஆஸ்திரேலிய பந்து வீச்சை புரட்டியெடுத்தனர்.நீண்ட காலத்திற்கு சூப்பர் பார்மில் இணைந்த  கேப்டன் ரோஹித் சர்மா சதமடித்து (120) ஆட்டமிழந்தார்.  தொடர்ந்து விக்கெட்டுகள் சரியாமல் பார்த்துக்கொண்ட ஜடேஜா அரைசதமடித்து அசத்தினார். 2-ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 114 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி யை விட 144 ரன்கள் முன்னிலை யில் உள்ளது.  ஜடேஜா(66), அக்சர் படேல் (52)ஆகியோர் களத்தில் உள்ளனர். பந்துவீச்சில் ஆஸ்திரேலிய வீரர் முர்பி அதிகபட்சமாக 5 விக்., கைப்பற்றினார்.

இன்று - 3-வது நாள் ஆட்டம்
இந்தியா - ஆஸ்திரேலியா
நேரம் : காலை 9:30 மணி
இடம் : விதர்பா மைதானம், நாக்பூர்
சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஹாட் ஸ்டார்