மார்க்சிற்கு பக்க வாத்தியம் வாசித்ததாக ஏங்கெல்ஸ் கூறினாலும் உண்மையில் இவரும் தனி
கச்சேரி நடத்தியவரே. மார்க்சியத்தின் மனசாட்சியாக மார்க்சிற்கு பிறகு திகழ்ந்தவர். இவர்
இல்லையெனில் மார்க்சியத்தின் முழு முகம் தெரிந்திருக்காது. இருவருக்குமிடையே ஒருவித
வேலைப் பிரிவினை இருந்தது. அவர் மனித குலத்தின் பொருளியல் வாழ்வை அலசினார்
என்றால் இவர் பண்பாட்டு வாழ்வை ஆராய்ந்தார். குடும்பம், தனிசொத்து, அரசு ஆகியவற்றின்
தோற்றம் பற்றி மட்டுமல்ல கிறிஸ்தவத்தின் தோற்றம் பற்றியும் எழுதியிருக்கிறார். இந்தியாவில்
இன்று மதம் பெரும் பிரச்னையாகியிருக்கும் நிலையில் ஏங்கெல்சை படிக்காமல்
அதை எதிர்கொள்ள முடியாது. மெய்யான மார்க்சியவாதியாக ஏங்கெல்சையும் படியுங்கள்.