facebook-round

img

வாழ்நாளில் மறக்கமுடியாத மனிதர் நடிகர் ராஜேஷ்

திரைக்கலைஞர் திரு.ராஜேஷ் அவர்களின் மரணச் செய்திகாலையில் தொலைக்காட்சியில் பார்த்தபோது மிகவும் அதிர்ந்துபோனேன்..

மதுரைவரும்போதெல்லாம் என்னை அழைத்து நீண்ட நேரம் உரையாடுவார்..அவர் திருவாரூர் பகுதிக்காரர் என்பதால்..கம்யூனிஸ்ட்கட்சியையும்..தியாகிகளையும்..தலைவர்களுடைய புகழையும் பற்றிய விபரங்களை நுனிவிரலில் வைத்திருப்பார்.. ஒருமுறைநானும்..சோலையழகுபுரம் ஆட்டோ தோழர் தனுசும்.. இன்னொரு நாளில் பாண்டியல் ஹோட்டலில் செல்வாவும்..நானும்..சுமார் 2. மணிநேரம் பேசிவிட்டு வந்தோம்..சமீபத்தில் சோழவந்தானில் நடைபெற்ற திருவிளையாடல் புகழ்..டீ.ஆர்.மகாலிங்கத்தின் 100ஆவது ஆண்டு விழாவிற்கு..அம்மா..பி.சுசீலாவுடன் வருகை தந்திருந்தார்.

மாலையில் வெஸ்டன் பார்க் ஓட்டலில் சந்தித்து பேசினேன்.நல்ல மழை பெய்ததால் நீண்டநேரம் உரையாடினோம்.கென்னட் மருத்துவமனையில் அவருடைய நெருங்கிய உறவினர் மருத்துவராக இருந்தவரை சந்திக்க போவதாக கூறினார். இரவில் முருகன் இட்லி கடையில் சாப்பிடலாமே வாருங்கள் என என்னை அழைத்தும் ஏதோ பணியின் காரணமாக நான் செல்லவில்லை.

மறுநாள் உரிமையோடு கோபித்துக் கொண்டார்..மிகுந்த அறிவுக்கு சொந்தக்காரர். மார்க்சியத்தின் மீது நல்ல பிடிப்போடு இருந்தவர். பின்னாளில் கணிதசாஸ்திரத்தின் மீது பற்றுகொள்ள துவங்கிவிட்டார். சென்னைக்கு வந்தால் தவறாமல் வீட்டிற்குவாருங்கள் என்று அன்புடன் அழைப்பார்.

இனி அவரை காண்பதற்கு வாய்ப்பில்லை. திரைதுறை நண்பர்களுக்கு ஒன்று என்றால் முதல் ஆளாகநிற்பார். தில் பெரியவர், சிறியவர் என்ற பேதம் பார்க்கமாட்டார். வாழ்நாளில் மறக்கமுடியாத மாமனிதர் அவர்!

-ஆர்.விஜயராஜன் - சிபிஎம் - மாநிலக்குழு உறுப்பினர்