facebook-round

img

இந்தியாவில் ஒரே மாதத்தில் 18.58 லட்சம் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கம்!  

இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 18,58,000 கணக்குகள் முடக்கியுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி ஒவ்வொரு மாதமும் எத்தனை அக்கவுண்ட்கள் தடை செய்யப்படுகின்றன என்ற விவரங்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. வாட்ஸ்அப் விதிகளை மீறியதால் பெரும்பாலான அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. இதுதவிர பயனர்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் தான் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 18,58,000 அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஏற்கனவே பதிவிடப்பட்ட குற்றச்சாட்டுகளே மீண்டும் பதிவாகி இருப்பின் அவற்றை மட்டும் வாட்ஸ்அப் நடவடிக்கைக்கு எடுத்துகொள்ளாது. மற்றபடி பயனர் தெரிவிக்கும் அனைத்து விதமான குற்றச்சாட்டுகளையும் வாட்ஸ்அப் பரிசீலனை செய்து தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.  

இதுபோல உங்களின் வாட்ஸ்அப் கணக்குகள் முடக்கப்பட்டால், வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முயற்சிக்கும்போது, your phone number is banned from using WhatsApp. Contact support for help என்ற வாக்கியம் காட்டும். ஏன் உங்களின் அக்கவுண்ட் தடை செய்யப்பட்டது என தெரியவில்லை எனில், இதுகுறித்து வாட்ஸ்அப்க்கு மின்னஞ்சல் அனுப்பலாம். அதன்பின் நம் கணக்கு வெரிஃபை செய்யப்பட்டு பின் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும்.