அசோக் என்று பெயர் கொண்ட அசாத்தியனே!
...................................................
அன்றாடம் சந்திக்கும்
சக மனிதர்களின்
கடக்க வியலா
சாலை வசதிக்காக. .
கல்வி கற்க சான்றிதழ்
இல்லாமல் தவிக்கும்
குழந்தைகளின்
பெற்றோர் துயர் போக்க. .
அதிகாரத்தை எதிர்க்க
குரலற்றவர்களின்
அன்றாட
வாழ்க்கை பிரச்சனைக்காக. .
இருள் விரட்டும்
தெரு விளக்கு
எரியவில்லை என்றால். .
எடை குறைக்கும்
ரேஷன் கடைகளில்
அநியாயம் என்றால். .
கண்ணெதிரே அநீதி
நடக்கும் என்றால். .
கொதித்தெழுந்து
ஊர்வலம் போனவன்,
நரம்பு புடைக்க
முழக்கமிட்டடவன்,
இதோ இறுதி ஊர்வலமாய்
எம் தோழர்கள்
சுமக்க சென்று கொண்டிருக்கிறான்.
உதிரம் கேட்டு தவிக்கும்
உயிர்களுக்கு
உதிரம் கொடுத்தவனே...
சாதி ஆதிக்க வெறி
எடுத்தவர்களின் அரிவாள்கள்
உன் உதிரத்தை
சாலையில் போக்கின. .
உயிர் காக்க அவர்கள்
சாதியினருக்கு நீ கொடுத்த
உதிர கொடையை என் செய்வர்!
உன் பெயர் எழுத முடியாமல்
கண்ணீர் திரை மறைக்கிறது.
எனினும் அழப்போவதில்லை.
சென்று வா
என் இளம் தோழனே
நீ வைத்த மிச்ச கணக்கை
நாங்கள் தீர்ப்போம்!
- உன் அன்பு தோழன்
எஸ்.ஜி.ரமேஷ்பாபு