districts

img

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிடுக!

செங்கல்பட்டு, ஜன.7- தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரி யர் காலிபணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தின் பள்ளி மாணவர்கள் மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது. மாணவர் சங்கத்தின் பள்ளி மாண வர்கள் மாநில சிறப்பு மாநாடு ஞாயிறன்று (ஜன. 7) செங்கல்பட்டில் மாநிலத் தலைவர் கோ.அரவிந்சாமி தலைமையில்  நடைபெற்றது.

சங்கத் தின் செங்கல்பட்டு மாவட்டச் செயலா ளர் மு.தமிழ்பாரதி வரவேற்றார். மாநாட்டை துவக்கிவைத்தும் பள்ளி மாணவர்களும்,  உளவியலும் தேர்வு, போதை பழக்கம் சமூகம் என்ற தலைப்பில் உளவியல் மருத்துவர் சுதாகர் பேசினார். மாநாட்டை வாழ்த்தி ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொருளார் மேத்யூ பேசினார். அறிக்கையை முன் மொழிந்து மாநில துணைச் செயலாளர் ரா.பாரதி, பேசினார்.

தீர்மானங்களை முன்மொழிந்து மத்தியக்குழு உறுப்பினர்கள் சி.மிரு துளா, க.பிருந்தா மாநில துணைத் தலைவர் தௌ.சம்சீர் அகமது ஆகி யோர் பேசினர்.  மாநாட்டை நிறைவு செய்து அகில இந்திய துணைத் தலை வர் நிதிஷ் நாராயணன் பேசினார் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் லி.நரேஷ் நன்றி கூறினார். தீர்மானங்கள் மூவலூர் இராமாமிர்தம்  திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், தமிழகம் முழுவதும் உள்ள  ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,

 மாணவர்களின் கல்வித் திறனை  மேம்படுத்துவதற்கு  இலவச மடிக்கணினியை உடனடி யாக வழங்க வேண்டும், கல்வி வளா கங்களில் நடைபெறக் கூடிய சாதிய வன்கொடுமைகளுக்கு  எதிராக குழு  அமைத்து மாணவர்களிடையே சமத்துவ எண்ணத்தை உருவாக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டது.பள்ளி மாண வர்கள் உப குழுவின்அமைப்பாளராக ரா.பாரதி தேர்வு செய்யப்பட்டார்.  முன்னதாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையிலிருந்து மாநாட்டு ஊர்வலம் நடைபெற்றது.