districts

img

செங்கல்பட்டில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்து காத்திருப்போருக்கு உடனடியாக உதவி தொகை வழங்க வேண்டும், 100 நாள் வேலை சட்ட விதிகளின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநிலத் தலைவர் தோ.வில்சன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை விளக்கி மாவட்டத் தலைவர் எம்.வள்ளிக்கண்ணன், மாவட்டச் செயலாளர் எஸ்.தாட்சாயணி மாநில குழு உறுப்பினர் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பேசினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  ஆட்சியர் அருண்ராஜ்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நேரடியாக வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.