சின்னாளப்பட்டி, ஆக.24- காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழ கத் தமிழ்த்துறையின் சார்பில் உலக நாட்டுப்புற வியல் நாள் விழா கொண்டா டப்பட்டது. நிகழ்ச்சிக்குப் பல்கலை பதிவாளர் (பொ) முனை வர் ராதாகிருஷ்ணன் தலை மை வகித்தார். பழனி பழனி யாண்டவர் கலை பண் பாட்டுக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.க.கிருஷ்ண மூர்த்தி கலந்துகொண்டார். உலக நாட்டுப்புறவியல் நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்துக் காந்தி கிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஒ.முத் தையா எடுத்துரைத்தார். பல்கலைக்கழக நுண் கலை உதவிப் பேராசிரியர் முனைவர் கா.இராஜராஜன் வாழ்த்தி பேசினார். தமிழ்த்துறை உதவிப் பேரா சிரியர் முனைவர் சி.சிதம் பரம் நன்றி கூறினார். முது கலை தமிழ் மற்றும் இந்திய இலக்கியம் மாணவர்கள் பழமொழி விடுகதைகளை எடுத்துக் கூறினர். நிகழ்வில் பல்துறை மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரி யர்கள் பங்கேற்றனர்.