கடமலைக்குண்டு, ஏப்.6- தேனி மாவட்டம், கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வனப் பகுதியில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகள வில் உள்ளதாலும் மரங்கள் மற்றும் புற்கள் அனைத்தும் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இதன் விளைவாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கோம்பைத்தொழு அருகே மேகமலை வனச்சர கத்திற்குட்பட்ட வனப்பகுதியில் காட்டு தீ பரவியது. துரி தமாக செயல்பட்ட வனத்துறையினர் 4 மணி நேரத்தில் காட்டுத் தீயை போராடி அணைத்தனர். இந்த நிலையில் செவ்வாயன்று வருசநாடு வனச்சர கத்திற்குட்பட்ட மணலாற்றுகுடிசை மற்றும் கோம்பைத் தொழு உள்ளிட்ட 2 இடங்களில் காட்டுத் தீ பரவி யது. இதனையடுத்து வருசநாடு, மேகமலை வனச்சர கத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் காட்டு தீ பரவிய இடங்களுக்கு சென்று சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.