இளையான்குடி பகுதியில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் கள ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்று, தகுதியுடைய 49 பயனாளிகளுக்கு ரூ.25.82 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வசுரபி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கா.வானதி, இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், உதவி ஆணையர் (கலால்) ரெங்கநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)கேசவதாசன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அனீஷ் சத்தார், இளையான்குடி வட்டாட்சியர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.