districts

img

சிவகாசியில் சிபிஎம் சார்பில் நீர், மோர் பந்தல்

சிவகாசி, ஏப்.11- சிவகாசியில் மாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா திங்க ளன்று நடைபெற்றது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சென்றனர்.  இந்நிலையில், பக்தர்களின் தாகம் தணிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் சுதந்திரப் போராட்ட வீரர்கள் தியாகி மாரிமுத்து-தொண்டர் துரைச்சாமி நினைவாக நீர், மோர் பந்தல் வழங்கப்பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள், பி.என்.தேவா, கே.முருகன், நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார், நகர்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், அன்ன லட்சுமி, கணேசன் மற்றும் காளிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.