விருதுநகர், செப்.18- விருதுநகரில் கழிவு நீரேற்று நிலையங்களில் பழுதாகியுள்ள ஏராளமான மின் மோட்டார்களை நகராட்சி நிர்வாகம் துரிதமாக சீர மைக்கவில்லை. இதன் காரண மாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. உயிரிழப்புகள் ஏற் படும் முன் மின் மோட்டார்களை பழுது நீக்கம் செய்ய வேண்டு மென மக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். விருதுநகர் நகராட்சியில் 2007-ஆம் ஆண்டு ரூ.23.25 கோடியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. மேலும் ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு பணிகள் தொடர்ந்து நடை பெற்று வந்தது. தற்போது வீடு களுக்கு இணைப்பு வழங்கும் பணி யும் நடைபெற்று வருகிறது. நகரில் உள்ள 25 ஆயிரம் குடியிருப்புகளில் சுமார் 12 ஆயிரம் வீடுகளுக்கு பாதா ளச் சாக்கடை இணைப்புகள் வழங் கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், தெருக்களில் உள்ள தொட்டிகளில் சேகரமாகிறது. பின்பு, கழிவு நீரேற்று நிலையங் கள்- கழிவு நீர் உந்து நிலையங்ளில் உள்ள கிணறுகளுக்கு செல்லும் வகையில் குழாய்கள் அமைக் கப்பட்டுள்ளது. அங்கிருந்து, மின் மோட்டார்கள் மூலம் கழிவு நீர் பிர தானக் குழாய்கள் மூலம் மாத்த நாயக்கன்பட்டி சாலையில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத் திற்கு செல்லும்.
அங்கு, கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு கௌசிகா ஆற் றில் சேரும் வகையில் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. கழிவு நீரேற்று- உந்து நிலை யங்கள் நகரில் எட்டு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாத்திமாநகர் கழிவு நீரேற்று நிலையத்தில் இயங்கிக் கொண்டிருந்த 50 எச்.பி மற்றும் 30 எச்.பி நீர் மூழ்கி மோட்டார்கள் இயங்கவில்லை. கல்லூரி சாலையில் உள்ள நீரேற்று நிலையத்தில் 10 எச்.பி மோட்டார், மல்லாங்கிணறு சாலை யில் ஏழு எச்.பி மோட்டார், விஸ்வ நாததாஸ் காலனியில் இரண்டு நான்கு எச்.பி மோட்டார்கள், வேலுச்சாமி நகர் மற்றும் கலை வாணர் நகரில் உள்ள இரு இரண்டு எச்.பி மோட்டார்கள், நகராட்சி மயா னத்தில் உள்ள ஏழு எச்.பி மோட் டார்களும் இயங்கவில்லை. ஆத்துமேடு பகுதியில் பிர தான குழாய்கள் உடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. மீண்டும் குழாய்கள் பதிக்கவில்லை. இத னால், கழிவு நீர் கௌசிகா ஆற்றில் விடப்படுகிறது. மொத்தத்தில் கழிவு நீரை கிணறுகளில் இருந்து வெளியேற் றம் பணி முறையாக நடைபெற வில்லை. கிணறு நிரம்பி கழிவு நீர் அருகிலுள்ள ஓடைகளில் செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக குடி நீர்க் குழாய்களில் கழிவு நீர் கலந்து குடியிருப்புகளுக்குச் செல்கிறது. இந்தக் குடிநீரை பருகும் மக்க ளுக்கு நோய் பரவி உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. தமிழக அரசு, விருதுநகர் நக ராட்சிப் பகுதிகளிலுள்ள கழிவு நீரேற்று நிலையங்களில் பழுதாகி கிடக்கும் மின் மோட்டார்களை போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.