விருதுநகர், மே 19- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் 3 ஆவது இடத்தை தக்க வைத்துக் கொண்டது. 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 வெள்ளிக்கிழமையன்று காலை வெளியிடப்பட்டது. அதில் பெரம்பலூர் மாவட்டம் முதலிடத்தையும், சிவகங்கை இரண்டாம் இடத்தையும் பிடித்தன. இந்நிலையில், விருதுநகர் மாவட்ட மானது, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் 3 ஆவது இடத்தைப் பெற்றுள் ளது. அதாவது கடந்த ஆண்டு, விருதுநகர் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு தேர்ச்சிய டைந்தவர்கள் 95.96 சதவீதம் பேர் ஆவர். ஆனால், இந்த ஆண்டு 96.22 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இருந்த போதும், 3 ஆவது இடத்தையே விருதுநகர் மாவட்டம் தக்க வைக்க முடிந்துள்ளது. பிற மாவட்டங்களில் மாணவ, மாணவி கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்ற கார ணத்தால் விருதுநகர் மாவட்டம் மேலும் முன்னேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி விருதுநகர் மாவட்டத்தில் 12307 மாண வர்கள், 12612 மாணவிகள் என மொத்தம் 24919 பேர் தேர்வு எழுதினர். 11662 மாண வர்கள் ( தேர்ச்சி விகிதம் 94.76), 12315 மாணவிகள் ( தேர்ச்சி விகிதம் 97.65) பேர் என மொத்தம் 23977 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.