districts

மதுரை முக்கிய செய்திகள்

கண்மாய்க் கரையை சிதைத்து சாலை ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார்

சிவகங்கை, ஆக.7- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா ஆ. தெக்கூர் கிராமத்தில் கண்மாய்க் கரையை அழித்து சாலை  அமைத்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரி டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் புகாரளித்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலை வர் வீரபாண்டி, மாவட்டத் துணைத் தலைவர் ஆறுமுகம்,  தெய்வாணை, லெட்சுமணன் ஆகியோர் உள்ளிட்ட பட்டி லின ஆட்சியரிடம் அளித்துள்ள புகாரில், “அச்சுக்காடு கண்மாய் பாசனம் 20 ஏக்கர். இதை நம்பி ஆதிதிராவிட மக்கள் கடந்த 50வருடகாலமாக விவசாயம் செய்து வரு கின்றனர். நிலங்களை நில உரிமையாளருகுத் தெரியா மல் பட்டா மாற்றம் செய்துள்ளனர்.  கண்மாய் கரையைச் சிதைத்து சாலை அமைத்துள்ள னர். கண்மாயில் உள்ள மடையையும் அகற்றத் திட்ட மிட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காந்திகிராமப் பல்கலை.,யில் ஆக. 9 முதல் கலந்தாய்வு தொடக்கம்

சின்னாளபட்டி, ஆக.7- திண்டுக்கல் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்க லைக்கழகத்தில் 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந் தாய்வுகள் பல்வேறு காலகட்டங்களாக நடைபெற உள்ளன. இளநிலை பட்டப்படிப்புகளுக்கான கலந்தாய்வு கள் ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளன. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 17 வரை கலந்தாய்வுகள் நடைபெற உள்ளன. கலந்தாய்வுகளில் பங்கேற்கத் தகுதியுடைய மாண வர்களுக்கான அழைப்பு குறுந்தகவல், மின்னஞ்சல்  மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பிவைக்கப் படும். அழைப்புக் கிடைக்கப்பெற்ற மாணவர்கள் மட்டுமே  கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலும். இது குறித்த கூடு தல் தகல்களைப் பல்கலைக்கழக இணையதளத்தின் வழித் (www.ruraluniv.ac.in) தெரிந்துகொள்ளலாம்.

ரயிலில் இருந்து  தவறி விழுந்தவர் பலி

சின்னாளப்பட்டி, ஆக.7- சிவகங்கை மாவட்டம் இடையமேலூர் அருகேவுள்ள சிவப்பட்டியை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கார்த்திக் (38). இவருக்கு பிரியா (31) என்ற மனைவியும் ஒரு மகள்  3 மகன்கள் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளன. சம்பவத்தன்று சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு  ரயிலில் பயணித்த கார்த்திக் கொடைரோடு-அம்பாத்துரை  இடையே ஊத்துப்பட்டி என்ற இடத்தில் வரும் போது  ரயிலில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கொடைரோடு ரயில்வே காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

ஏ.டி.பி. தொடர்ந்த பொய்வழக்கிலிருந்து  சிஐடியு தலைவர்களை விடுவித்தது நீதிமன்றம்

திண்டுக்கல், ஆக.7 வத்தலகுண்டு அரசு போக்குவரத்து பணிமனையில் அதிமுக-சிஐடியு தொழிற்சங்கத்தினரிடையே ஏற்பட்ட  தகராறையொட்டி அதிமுகவினர் தொடர்ந்த பொய்வழக்கி லிருந்து சிஐடியு தலைவர்களை நீதிமன்றம் விடு வித்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு வத்தலகுண்டு அரசு போக்கு வரத்துப் பணிமனையில் அதிமுக தொழிற்சங்கமான ஏ.டி.பி.யின் கிளை நிர்வாகி நாகஜோதிக்கும் சிஐடியு கிளை நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையொட்டி ஏ.டி.பி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நாக ஜோதி காவல்நிலையத்தில் கொடுத்த பொய்ப் புகாரின் அடிப்படையில் சிஐடியு நிர்வாகிகள் கணேசன், பாண்டி,  கோட்டைமுருகன், ராமமூர்த்தி, மணிகண்டன் ஆகிய  ஐந்து பேர் மீது பல்வேறு பிரிவிகளின் கீழ் வழக்குப் பதி யப்பட்டது. இந்த வழக்கு திண்டுக்கல் தலைமை குற்றவி யல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் சிஐடியு நிர்வாகி ராம மூர்த்தி காலமானார். கடந்த பத்து ஆண்டுகள் நடை பெற்ற இந்த வழக்கில் சிஐடியு நிர்வாகிகள் குற்றமற்ற வர்கள் என்று விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை வழக்கறிஞர்கள் நாகேந்திரன், கென்னடி, பாரத் ஆகி யோர் நடத்தினர். 

இரும்பு பைப்புகள் திருடியவர்கள் கைது 

தேனி, ஆக.7- போடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரும்பு பைப்புகள் திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.  போடி அருகே சில்லமரத்துப்பட்டி ராதாகிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி மகன் சண்முக வேல் (52). இவருக்குச் சொந்தமான பண்ணைத் தோட்டம்  சிலமலை ராணிமங்கம்மாள் சாலை அருகே உள்ளது. இங்கு வைத்திருந்த இரும்பு பைப்புகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில் சில்லமரத்துப்பட்டி ஜீவா குடியிருப்பைச் சேர்ந்த மச்சக்காளை மகன் பூபதி (23), இளங்கோ மகன் லோகேஷ் (22), போடி மதுரை வீரன் தெருவை சேர்ந்த  ஆறுமுகம் மகன் பாண்டிமுருகன் (23) என்பது தெரிந்தது.  இதுகுறித்து சண்முகவேல் போடி தாலுகா காவல் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பைப்புகளை திருடிய மூன்று பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

யா.ஒத்தக்கடையில்  டாஸ்மாக் பாட்டில்கள் திருட்டு

மதுரை, ஆக.7- மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே அரசு மதுக்கடையில் சுவற்றில் துளையிட்டு 200-க்கும் மேற்பட்ட  மதுபாட்டில்களை திருடிச்சென்ற நபர்களை காவல்துறை யினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் யா.ஒத்தக்கடை அருகே உள்ளது பொருசுபட்டி கிராமம். இங்கு, அரசு மதுக்கடை இயங்கி  வருகிறது. இந்தக் கடையில் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (41) மேற்பார்வையாளராகப் பணிபுரிந்து வரு கிறார். சனிக்கிழமை பணி நேரம் முடிந்த நிலையில் கடை ஊழியர்கள் கடையை அடைத்து விட்டுச் சென்று விட்டனர்.  ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து கடையைத்  திறந்தபோது, கடையில் மதுபாட்டில்கள் சிதறிக்கிடந்துள் ளன. இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கடை யின் பின்புறம் உள்ள சுவற்றில் துளையிட்டு கடைக்குள்  புகுந்த நபர்கள் கடையிலிருந்த 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இது  குறித்து மாணிக்கம் அளித்த புகாரின்பேரில் ஒத்தக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர். 

யாசகம்: பத்து குழந்தைகள் மீட்பு 75 பேர் மீது வழக்குப் பதிவு

மதுரை, ஆக.7- மதுரையில் யாசகம் எடுக்கப் பயன்படுத்தப்பட்ட பத்து  குழந்தைகளை குழந்தைகள் நலக்குழு மீட்டுள்ளனர். மதுரை நகரின் முக்கியச் சாலைகள் மற்றும் போக்கு வரத்து சிக்னல் பகுதிகளில் குழந்தைகளைப் பயன்படுத்தி யாகசம் எடுப்பவர்கள் அதிகரித்து வந்தனர். இந்நிலை யில் மதுரை மாநகர் காவல் துறை ஆபரேசன் புதுவாழ்வு  என்ற திட்டத்தின்கீழ், குழந்தைகள் மற்றும் ஆள் கடத்தல்  தடுப்புப் பிரிவு, குழந்தைகள் நலக்குழுமம் உள்ளிட்ட  துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த சில நாட்களாக  மதுரை நகர் முழுவதும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  அப்போது போக்குவரத்து சிக்னல்கள், கோயில்கள், முக்கிய சந்திப்புகள், பேருந்து மற்றும் ரயில் நிலையம் பகுதிகளில் குழந்தைகளை வைத்து யாசகம் பெற்று வந்த 50 ஆண்கள், 35 பெண்கள், 10 குழந்தைகள் என  95 பேர் மீட்கப்பட்டனர். இதில் ஆண்கள் மற்றும் பெண்கள்  மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து இனி வருங்கா லங்களில் யாசகம் பெறக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு சொந்தப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.  யாசகம் எடுக்கப்பயன்படுத்தப்பட்ட பத்துக் குழந்தை கள் மீட்கப்பட்டு குழந்தைகள் நலக்குழுமத்திடம் ஒப்ப டைக்கப்பட்டனர். 

கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவில்லிபுத்தூர், ஆக.7- திருவில்லிபுத்தூர் தெற்கு ரத வீதியில் டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டு நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்பாளர் குண சேகரன் தலைமை வகித்தார். ஏஐடியுசி ஜெகதீஷ்குமார் முன்னிலை வகித்தார். டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேள னத் துணைத் தலைவர் வேல்முருகன் கண்டன உரை யாற்றினார். திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம் பகுதி யிலுள்ள டாஸ்மாக் கடை மேற்பார் வையாளர் மீது தாக்கு தல் நடத்திய சக்திபாலனை குண்டர் சட்டத்தில் கைது  செய்ய வேண்டும். டாஸ்மாக் ஊழியர் களின் உயிருக்கும்,  அரசின் சொத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்  பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து  சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு திருமலை, தேவா, ஏஐடியுசி  மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தேசிய தர்பூசனி தினம் 

திருவில்லிபுத்தூர், ஆக.7- தேசிய தர்பூசனி தினம் ஆக.3-ஆம் தேதி கடைப் பிடிக்கப்பட்டது. அதனொரு பகுதியாக கலசலிங்கம் பல்கலை., வேளான் பிரிவு உதவிப் பேராசிரியர்கள் ம. ஜெயந்தி, இ.ரபீணா ஆகியோர் தலைமையில் நான்காம்  ஆண்டு வேளாண் மாணவிகள் சி.தர்ஷினி, ர.வினுப் பிரியா, ஆ.கவிபிரியா, வீ.வினிஷா, ஜான்வி ஜாக்குலின்,  தேவபிரபா, சி.திவ்யா, ஜெ.சக்தி உமா, பா.கோபிகா ஆகி யோர் தேசியாபுரத்திலுள்ள சி.எஸ்.ஐ ஆரம்பப் பள்ளியில்  தேசிய தர்பூசணி தினத்தை பள்ளி மாணவிகளுடன் இணைந்து கொண்டாடினர். தர்பூசணி பழத்தின் நன்மைககள் குறித்து பற்றி மாணவ, மாணவிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பள்ளியின் தலை மையாசிரியர் செல்வ நாயகம் கலந்துகொண்டார்.

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க அருந்ததியர் மக்கள் கோரிக்கை

விருதுநகர், ஆக.7- விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள ரெங்கப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அருந்ததியர் மக்கள் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டுமென ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :- சாத்தூர் அருகே உள்ளது ரெங்கப்பநாயக்ன்பட்டி. இங்குள்ள காலனியில் 200 அருந்ததியர் குடும்பங்கள் வசித்து வருகிறோம். அனைவரும் கூலி வேலை செய்கிறோம். இதில் பலர் கூட்டுக் குடும்பமாகவும், வாடகை வீட்டிலும் வசித்து வருகிறோம். சொந்தமாக வீடு, நிலம் இல்லை. எனவே,ஆதி திராவிடர் நலத்துறை மூலம் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசைத் திருவிழா: சதுரகிரி கோவிலில்  முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு

திருவில்லிபுத்தூர், ஆக.7- திருவில்லிபுத்தூர் : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை திருவிழாவுக்கான, முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து விருது நகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். விருதுநகர் மாவட்டம், தாணிப்பாறை யில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகா லிங்கம் கோயிலில் நடைபெறவுள்ள ஆடி  அமாவாசை திருவிழாவையொட்டி, ஆக. 12-ஆம் தேதி முதல் ஆக. 17-ஆம் தேதி வரை  கோயிலுக்குச் செல்ல பக்தர் களுக்கு அனு மதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்  பக்தர்களின் வசதிக்காக தற்காலிகப் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு  அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வரு வது குறித்து, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெய சீலன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சி யர் கூறியதாவது: சதுரகிரி சுந்தரமகா லிங்கம் திருக்கோயிலில் நடைபெறவுள்ள ஆடி அமாவாசை திருவிழாவில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதி களிலிலிருந்தும் திரளான பக்தர் கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் பங்கேற்கும் பொதுமக்களுக்கும், பக்தர்  களுக்கும் உரியப் பாதுகாப்பு அளிக்கவும்,  கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தவும்  காவல்துறையினர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பொதுமக்கள், பக்தர்களுக்குத் தேவை யான குடிநீர் வசதி, சுகாதார வசதிகள்  மேற்கொள்ளப்படும் என்றும், சுற்றுச்சூழல்  மாசுபடாத வண்ணம் வனத் துறையின் மூலம் முன்னேற்பாட்டுப் பணிகள் மேற்  கொள்ளப்படும் என்றும்,

எந்த நேரத்தி லும் முதலுதவி சிகிச்சை அளித்திடும் வகை யில், மருத்துவர்கள், மருத்துவப் பணியா ளர்களுடன் கூடிய மருத்துவக் குழு அமைக்கப்படவுள்ளது என்றும், மருத்துவ அவசர ஊர் தி வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், சதுரகிரிக்குச் செல்லும் பக்தர்  கள் பிளாஸ்டிக் பொருள்கள், போதைப்  பொருள்கள் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தாணிப்பாறை அடி வாரத்தில் சேரும் குப்பைகளை அகற்று வதற்குத் தேவையான துப்புரவுப் பணியா ளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். மாவட் டத்தின் பல்வேறு பகுதிகளிலிலிருந்தும் சிறப்புப் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மூலம் நட வடிக்கை எடுக்கப்படவுள்ளது, வெளியூர்  பேருந்துகள், தனியார் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்துவதற்கு ஏற்ப வசதிகள் ஏற்படுத்தப் படும் எனவும் தெரிவித்தார். சதுரகிரிக்குச் செல்லும் பக்தர்கள், மாவட்ட நிர்வாகத் தின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்  டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, துணை இயக்கு நர் மேகமலை புலிகள் காப்பகம் (திரு வில்லிபுத்தூர் ) திலீப்குமார், கூடுதல் காவல்  கண்காணிப்பாளர் சூரியமூர் த்தி, சிவகாசி  கோட்டாட்சியர் விஸ்வநாதன், திருவில்லி புத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் முகேஷ்ஜெயக்குமார், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் கள் உடனி ருந்தனர்.