திண்டுக்கல், அக்.7- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்தி ரம் அருகேயுள்ள கே.புதுக்கோட்டையில் முதுபெரும் தோழர் எஸ்.காளிமுத்து திங்க ளன்று காலமானார். கட்சியின் மூத்த தோழ ரான காளிமுத்துவுக்கு வயது 98. தோழர் கள் ஏ.பாலசுப்ரமணியம், எஸ்.ஏ.தங்க ராஜன், மதனகோபால் போன்ற தலைவர் களின் சமகால தோழர் காளிமுத்து. 16 வயது முதல் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்ட வர். தலைமறைவு வாழ்கை, 25 நாட்கள் சிறை வாசம் என அனுபவித்தவர். அவரது மறைவு செய்தியறிந்து கட்சி யின் மக்களவை உறுப்பினர் ஆர்.சச்சி தானந்தம், மாவட்டச் செயலாளர் பி.செல்வ ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பி.வசந்தாமணி, ராணி, ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சக்திவேல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தயாளன், பி.என்.ஆறு முகம், மூத்த தோழர் பிச்சை உள்ளிட்டோர் பங்கேற்று தோழர் காளிமுத்து உடலுக்கு மலை அணிவித்து மரியாதை செய்தனர். செவ்வாயன்று இறுதி நிகழ்ச்சி நடை பெறுகிறது.