districts

img

சூயஸ் பணியால் பள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்

கோவை, ஜன.6- கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு சூயஸ் குடிநீர் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழி களில் தண்ணீர் தேங்கி பள்ளமான தால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டி ருந்த வாகனங்கள் பள்ளத்தில் சிக் கின. கோவை ஆட்சியர் அலுவலகத் திலிருந்து, ரயில் நிலையம் வரையி லான ஸ்டேட் பேங்க் சாலையில் தற் போது கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் சூயஸ்  நிறுவனத்தின் பணிகள் நடைபெறு கிறது. குடிநீர் திட்டத்திற்காக  பழைய குழாய்களை மாற்றி  அமைக்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதையொட்டி கடந்த வாரம் முதல் போக்குவரத் தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருவழிப்பாதையாக இச்சாலை மாற்றப்பட்டுள்ள போதும், கோபா லபுரம் பகுதியில் அமைந்துள்ள  அலுவலகங்கள் மற்றும் கடைக ளுக்கு வருவோர், இச்சாலையை வாகனங்கள் நிறுத்துமிடமாக பயன்படுத்தி வருகின்றனர். இந் நிலையில், வியாழனன்று காலை  இச்சாலையில் அமைக்கப்பட் டுள்ள குழாய்களில் சோதனை முயற்சி மேற்கொண்ட போது, குழாயிலிருந்து தண்ணீர் வெளி யேறியது. இதனால் குழாய்கள் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங் களில் மண் இளகி, உள்வாங்கியது. அப்போது அங்கு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் குழியில் இறங்கியது. இதையடுத்து அங்கிருந்தவர் கள் இணைந்து ஆட்டோவை மீட்ட போதும், காரை மீட்க முடியாததால் குழாய் பதிக்கும் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜே.சி.பி இயந்திரம் மூலம் கயிறு கட்டி மீட்கப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டதோடு, வாகன நெரிசலும் ஏற் பட்டது. சூயஸ் நிறுவனத்தால் இப் போது வாகனங்கள் சிக்கிக்கொண் டது. நாளை தண்ணீர் வரி கட்ட முடி யாமல் நாமும் சிக்குவோம் என ஊடக நண்பர்கள் வேடிக்கையாக பேசிக்கொண்டது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.