தேனி, ஜூன் 2- பாஜக அரசின் மோசமான வேளாண் சட்டத்தை எதிர்த்து போரா டிய தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாயத்தை பெங்களூருவில் தாக்கிய சம்பவத்தைக் கண்டித்து தேனியில் ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் சார் பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்யுசிஐ விவ சாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுருளியாண்டவர் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநி லக்குழு உறுப்பினர் கே.ராஜப்பன், மாவட்ட செயலாளர் டி.கண்ணன், தாலுகா நிர் வாகிகள் வி.என்.ராமராஜ், வி.ராஜேந்தி ரன், சிபிஐ விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் காசிவிஸ்வநாதன், வாலி பர் சங்க மாவட்ட தலைவர் கே.ஆர். லெனின் உள்ளிட்டோர் பேசினர்.