சங்கரன்கோவில் அருகே நிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல் இரண்டு பேர் கைது
சங்கரன்கோவில், ஜூலை 17- சங்கரன்கோவில் அருகே உள்ள மலையான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருநாதன் (25) சங்கரன்கோவி லில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணி யாற்றி வருகிறார். இந்த நிதி நிறுவனத்தில் சங்கரன் கோவில் அருகே உள்ள பெரியூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி மகன் கோட்டிராஜ் (50) என்பவர் தவணை முறை யில் செல்போன் வாங்கி இருந்தாராம். ஆறு மாதமாக தவணை பணத்தை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதனை செல்போனில் கேட்ட குருநாதனிடம் ஊருக்கு வாருங்கள் வரும் வழியில் பணத்தை தருகிறேன் என்று கூறியிருக்கிறார். இதனை உண்மை என்று நம்பிய குரு நாதன் அவரது நிதி நிறுவன மேலாளர் இருளப்பன் மற்றும் ஊழியர் ராஜா ஆகியோர் மோட்டார் சைக்கிளில் சென்ற னர். சங்கரன்கோவில் அருகே உள்ள ஆனையூர் அருகே சென்ற போது குருநாதன் மீது கோட்டிராஜ், அவரது உற வினர் கார்த்திக் (38) ஆகியோர் மோட்டார் சைக்கிள் மூலம் மோதினர். கீழே விழுந்த குருநாதனை கோட்டிராஜும், கார்த்திக்கும் சர மாரியாக தாக்கினர். இதில் படுகாய மடைந்த குருநாதனை பின்னால் மோட்டார் சைக்கிள் வந்த ஊழியர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக பானள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து குருநாதன் சங்கரன்கோவில் தாலுகா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து கோட்டி ராஜையும் கார்த்திக்கை யும் கைது செய்தனர்.
மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
திருநெல்வேலி, ஜூலை 17- கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை தமிழ்நகர் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் சுபாஷ் (வயது 23). இவர் மார்த்தாண்டத்தில் டைல்ஸ் கட்டிங் செய்யும் வேலை செய்து வந்தார். தற்போது இவரது பெற்றோர் மதுரையில் வசித்து வருகின்றனர். ஞாயி றன்று சுபாசுக்கு பிறந்தநாள் என்பதால் மார்த்தாண் டத்தில் வேலையை முடித்துவிட்டு சனிக்கிழமை இரவு சம்பளத்தை வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் மது ரைக்கு புறப்பட்டு சென்றார். ஞாயிற்றுக்கிழமை அதி காலை ரெட்டியார்பட்டி மலை அருகே நான்கு வழிச்சாலை யில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சுபாஷ் ரத்த வெள் ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து நெல்லை மாநகர போக்கு வரத்து புலனாய்வு பிரிவு போலீ சாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுபாஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சதுரங்க விளையாட்டு போட்டிகள்
தூத்துக்குடி, ஜூலை 17- சென்னையில் வருகிற 28ஆம் தேதி ஒலிம்பியாட் சதுரங்க விளையாட்டு போட்டிகள் தொடங்க இருக்கிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அந்தந்த மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்ட சதுரங்க விளையாட்டு கழகம் சார்பில் தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் சதுரங்க விளை யாட்டு போட்டி நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்து கோட்டாட்சி யர் சிவசுப்பிரமணியருடன் சதுரங்க விளையாட்டு ஆடி னார். அவருடன் தூத்துக்குடி கோட்டாட்சியர் சிவசுப்பிர மணியன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வகுமார், தூத்துக்குடி மாவட்ட சதுரங்க விளையாட்டு கழக செயலாளர் காமராஜ், கல்லூரி பேராசிரியர் கற்பகவல்லி, பொருளாளர் நிக்சன், சங்க நிர்வாகிகள் சாந்தி, பிராங்கி ளின் பயிற்சியாளர் அருண்குமார் உள்பட மாணவ மாண வியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
திருநெல்வேலி, ஜூலை 17- நெல்லையில் வருகிற 6-ந்தேதி ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். நெல்லை மாநகர ஊர்காவல் படையில், ஊர்காவல் படையினர் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வருகிற 6-தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை ஆண்கள் 39 பேர் மற்றும் பெண்கள் 7 பேர் என மொத்தம் 46 பேருக்கு தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். நெல்லை மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும். 2 கலர் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி தகுதிச்சான்று,, ஆதார் அட்டை, இருப்பிட சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல் ஆகிய ஆவணங்களுடன் நெல்லை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நேரில் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
தீக்கதிர் செய்தி எதிரொலி: பாலப் பணிகள் நிறைவு
தஞ்சாவூர், ஜூலை 17 - தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஆவணம் சாலையின் குறுக்கே அமைக்கப்படும் சிறு பாலத்தை விரைந்து கட்டி முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு வலியுறுத்தி இருந்தது. பேராவூரணி கடைவீதி, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி முதன்மைச் சாலை, சேது சாலை, ஆவணம் சாலை ஆகிய இடங்களில் சாலை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு, சாலை நடுவே தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்றன. இதனொரு பகுதியாக ஆவணம் சாலையில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்றது. இதில் ஓர் இடத்தில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கப்பட்டு, அங்கிருந்து சாலையின் குறுக்கே மற்றொரு பக்கம் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலுடன் இணைப்பதற்காக, ஆவணம் சாலையில், முன்னாள் நகரத் தந்தை வேலாயுதம் செட்டியார் வீடு அருகே, சாலையின் குறுக்கே சிறுபாலம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்தது. அதில் ஒரு பகுதி பாலப்பணி முடிவடைந்த நிலையில், மற்றொரு பகுதி இதுவரை பணி முடிக்கப்படாமல் இருந்தது. இதனால் இந்த வழியில் வாகனங்கள் செல்வதில் இடையூறு ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மேலும் சாலைப் பணி நடைபெறுவது குறித்து எச்சரிக்கை பலகை வைக்கப்படாததால் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வரும் வருவோர் அருகில் வந்து தடுமாறி விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது. எனவே எச்சரிக்கைப் பலகை வைக்கவும், சாலை பணிகளை விரைந்து முடித்து போக்குவரத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரக்குழு சார்பில், செயலாளர் வே.ரெங்கசாமி நெடுஞ்சாலை துறையைக் கேட்டுக் கொண்டிருந்தார். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் கடந்த ஜூலை 3 ஆம் தேதி விரிவான செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்து பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து கடந்த 10 தினங்களாக நடைபெற்ற பணி முடிந்து, வெள்ளிக்கிழமை போக்குவரத்து பயன்பாட்டிற்கு பாலம் திறந்து விடப்பட்டது. செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத் துறையினருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் 11 மையங்களில் நீட் தேர்வு
திருநெல்வேலி, ஜூலை 17- இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு ஞாயிற் றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெற்றது. நெல்லை மாவட்டத்திலும் இந்த தேர் வுக்கு ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். நெல்லையில் 11, தென்காசி மாவட்டத்தில் 1 என மொத்தம் 12 மையங்களில் இன்று நடைபெறும் இந்த தேர்வை எழுத 6,730 மாணவ மாண விகள் விண்ணப்பித்திருந்தனர். ஞாயிற் றுக்கிழமை காலை 11.40 மணி முதல் மாணவ மாணவிகள் தேர்வறைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். மதியம் 1.30 மணி வரை வந்த மாணவ மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மதி யம் 2 மணிக்கு தொடங்கிய தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெற்றது. இதனை ஒட்டி கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அரசின் வழிகாட்டு நெறி முறைகள் கடுமையாக கடைப்பிடிக்கப் பட்டன, முகக் கவசம் அணிந்து வந்த தேர்வர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப் பட்டனர். முன்னதாக ஒவ்வொரு தேர்வு மையத்திலும் வைக்கப்பட்டிருந்த கிருமி நாசினி மூலம் அவர்கள் கைகளை சுத்தப் படுத்திவிட்டு அதன் பின்னர் உள்ளே சென்ற னர். ஏற்கனவே மாணவ- மாணவிகள் மூக்குத்தி, கம்மல், பெல்ட், கை கடிகாரம் உள்ளிட்டவை அணிந்து உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததால் மாணவ- மாணவிகள் அவற்றை கழற்றிய பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் தலையில் கிளிப் உள்ளிட் டவை அணிவதற்கும் தடை விதிக்கப்பட்டி ருந்தது. இந்த தேர்வை ஒட்டி கண்காணிப்பு பணியில் 14 அப்சர்வர்கள், 12 தலைமை கண்காணிப்பாளர்கள், 24 தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட அதிகாரி கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அனைத்து தேர்வு மையங்களிலும் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
தேர்தல் அறிவிப்பு
தென்காசி, ஜூலை 17- தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் தென்காசி மாவட்ட விவசாயிகளுக்கான ஒரு அறிவிப்பு வெளியி டப்பட்டுள்ளது. தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் மற்றும் நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் தலைவர் மற்றும் ஆட்சி மண்டல தொகுதி உறுப்பினர்களுக்கான தேர்தல் 31.7.2022 அன்று காலை 7 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் 19.7.2022 முதல் 20.7.2022 வரை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தாக்கல் செய்யலாம். போட்டியிட விரும்புவோர் வேட்பு மனு படிவங்களை அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்றுக் கொண்டு தாக்கல் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
ரூ.9 லட்சம் மதிப்பில் சோலார் பேனல்கள் திருட்டு
திருச்சுழி, ஜூலை 17- திருச்சுழி அருகே விடத்தகுளம் கிராமத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து 820 மதிப்பிலான சோலார் பேனல்கள் திருடு போனத குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே விடத்த குளம் கிராமத்தில் தனியார் நிறுவனம் சூரிய மின்சக்தி அலகு அமைக்க முடிவு செய்துள்ளது. இப்பணிகளை சூரியமின்சக்தி பேனல்கள் விற்பனை நிறுவனம் மூலம் செய்து வந்தது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 23 அன்று ரூ 8,71,820 மதிப்பிலான பேனல்கள் குறைவாக இருப்பது தெரிய வந்தது. பல இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. எனவே, தனியார் நிறுவன மேலாளர் பாரதிதாஸ் என்பவர் இதுகுறித்து நரிக்குடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து பேனல்களை திருடிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
மணல் திருட்டு: லாரி, மண் அள்ளும் இயந்திரம் பறிமுதல்
திருச்சுழி, ஜூலை 17- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சாமிநத்தம் கிராம குண்டாற்றுப் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மணல்திருட்டில் ஈடுபடுத்தப்பட்ட லாரி மற்றும் ஜேசிபி எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டன. திருச்சுழி அருகே உள்ள குண்டாறு பகுதிகளில் மணல் திருட்டு நடைபெறுவதைத் தடுக்க திருச்சுழி வட்டாட்சியர் சிவக்குமார் மற்றும் துணை வட்டாட்சியர் சிவனாண்டிஆகியோர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, சிலர் ஜேசிபி உதவியுடன் மணல் திருட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. வருவாய்த் துறை அதிகாரிகள் வருவதை அறிந்த மணல் திரு டர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து, வட்டாட்சியர் சிவக்குமார், ஜேசிபி இயந்திரம் , லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி யோடியவர்களை தேடி வருகின்றனர்.
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 40 பவுன் நகைக்கொள்ளை
சின்னாளபட்டி, ஜூலை 17- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ஸ்டேட் பாங்க் காலனி ராஜகாளியம்மன்தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை (62). இவரது மனைவி கோமதி . இவர்கள் மட்டும் வீட்டில் குடியிருந்து வருகிறார்கள். வெள்ளி யன்று இரவு தனது குடும்பத்துடன் கேரள மாநிலம் கொச்சிக்கு சுற்றுலா சென்றார். சனிக்கிழமையன்று இரவு வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவில் இருந்த சுமார் 40 பவுன் நகைகள் மற்றும் 1 லேப்டாப்பை கொள்ளையடித்து சென்றுள்ளனர் . மறுநாள் காலையில் உறவினர்கள் வந்து பார்த்த போது வீடு திறந்து கிடந்தது. இதுகுறித்து சின்னாள பட்டி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல் ஆய்வாளர் வெங்கிடாசலம் தலைமையிலான காவல் துறையினர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
திருடிய மோட்டார் சைக்கிளுடன் தப்பியவருக்கு வலைவீச்சு
அருப்புக்கோட்டை, ஜூலை 17- அருப்புக்கோட்டையில் திருடிச் சென்ற மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிலையத்தில் ஆயிரம் ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு விட்டு பணம் தராமல் தப்பிச் சென்ற நபரை போலீசார் தீவிரமாகத் தேடிவருகின்ற னர். அருப்புக்கோட்டை காந்திநகர் புறவழிச்சாலை தனி யார் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் உள்ளது. அங்கு வந்த நபர் திடீரென ஒரு மோட்டார் சைக்கிளைத் திருடிச்சென்றுள்ளார். பின்னர் அதே பகுதியில் உள்ள பெட்ரோல் நிலை யத்திற்கு சென்றுள்ளார். அங்கு அந்த வாகனத்திற்கு ஆயி ரம் ரூபாய்க்கு பெட்ரோ நிரப்பியுள்ளார். ஆனால் பணம் தரவில்லை. அப்படியே தப்பிச்சென்று விட்டாராம். இதுகுறித்து தனியார் நிறுவன ஊழியர் கொடுத்த புகா ரின் பேரில் அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் திருடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
பழனியில் பேருந்து மோதி முதியவர் பலி
பழனி, ஜூலை 17- திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த சிந்தல வாடம்பட்டி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த இருளப்பன் (60) என்பவர் மீது தனியார் பேருந்து மோதி யது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டதில் பேருந்து நிறுத்தத் தில் நின்றுகொண்டிருந்த மயிலான் (65), அவரது மனைவி அருக்காணி (60) ஆகியோர் மீது விழுந்தார். இதில் அவர்கள் 2 பேரும் படுகாயமடைந்தனர்.இருளப்பன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவி பலாத்காரம்: கைதான நபருக்கு ஜாமீன் மறுப்பு
மதுரை, ஜூலை 17- சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த வெள்ளை யன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், பள்ளி மாணவியை பாலியல் வல்லுறவு கொண்டதாக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளேன் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி. இளங்கோவன் முன் சனிக்கிழ மையன்று விசாரனைக்கு வந்தது. விசாரணையின் போது அரசு தரப்பில் கூறுகையில், மனு தாரர் வெள்ளையன் மேலும் சிலர் சேர்ந்து பள்ளி மாணவியை பாலியல் பலாத் காரம் செய்துள்ளார்கள். இதனால் மாணவி கர்ப்பம் அடைந்தார். இது குறித்த புகாரின் பேரில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த வழக்கில் சிலருக்கு டிஎன்ஏ பரிசோதனை எடுக்கப் பட்டுள்ளது. மேலும் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. எனவே மனுதாரருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்த நீதிபதி, மாணவி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குற்றச்சாட்டப் பட்டுள்ள மனுதாரர் ஜாமீன் வழங்கினால் வழக்கின் சாட்சி களை கலைக்க நேரிடும். மேலும் இது கடுமையான குற்றச்சாட்டாக இருப்பதால் நீதிமன்றம் மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
வேடசந்தூர் அருகே சிறுமியின் கையை கட்டிப்போட்டு கடத்த முயற்சி ஐஸ் வியாபாரி போலீசாரிடம் ஒப்படைப்பு
வேடசந்தூர், ஜூலை 17- வேடசந்தூர் அருகே சிறுமியின் கையை கட்டிப்போட்டு வாயில் துணி வைத்து அடைத்து கடத்த முயன்ற ஐஸ் வியா பாரியை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த னர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 8 வயது மகள் உள்ளார். இவர் இதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஞாயிறன்று பள்ளி விடுமுறை என்பதால் பகல் 11 மணியளவில் சக சிறுமிகளுடன் காளியம்மன் கோவில் முன்பு மரத்தடியில் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு சைக்கிளில் ஐஸ் மற்றும் சமோசா விற்பனை செய்துகொண்டு வேடசந்தூர் சாலைத்தெரு வைச் சேர்ந்த முகமதுரபீக்(50) என்பவர் வந்துள்ளனர். விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை அழைத்து விளையாடலாம் என்று கூறி இரண்டு கைகளையும் கயிற்றால் கட்டியும், சத்தம் போடாமல் இருப்பதற்காக வாயில் துணி வைத்து அடைத்துள்ளார். இதை பார்த்த பொதுமக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஐஸ் வியாபாரி முகமதுரபீக் என்பவரை பிடித்து காளியம்மன் கோவிலுக்குள் வைத்து பூட்டி கூம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கூம்பூர் போலீசார் பூதிப்புரத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் சிறைப்பிடித்து வைத்தி ருந்த ஐஸ் வியாபாரி முகமதுரபீக்கை மீட்டு கூம்பூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி னர். இதில் சிறுமியை கடத்திச் செல்வதற்காக கட்டி வைத்த தாக அவர் தெரிவித்தார். இது குறித்து சிறுமி தந்தை கூம்பூர் காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ஜெயராணி வழக்குப்பதிவு செய்து ஐஸ் வியாபாரி முகமது ரபீக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
சாத்தூரில் மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி
சாத்தூர், ஜூலை 17- சாத்தூரில் பாதாளச்சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டும் போது திடீரென மண் சரிந்து விழுந்ததில் இரு தொழிலாளர்கள் பலியாகினர். விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கடந்த சில வரு டங்களாக பாதாளச் சாக்கடை பணிக்காக குழிகள் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கப்பட்டு வரும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 30 தொழிலாளர்கள் வேலை செய்து வரு கின்றனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று நள்ளிரவு, சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் பாதாளச் சாக்கடை குழிகள் தோண்டும் பணியில் 6 பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதில், குழி தோண்டும் பணியில் ஈடுபட்டி ருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள குகையூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல்(40), கிருஷ்ணமூர்த்தி (50)இருவரும் மண் சரிவில் சிக்கிக் கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீய ணைப்புத்துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேரத்திற்குப் பின், சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். இருவரது உடல்களும் கூராய்வுக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.