திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி அறிவிப்பு திண்டுக்கல், செப்.8- திண்டுக்கல்லில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பாரம்பரிய மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு தொடர்பான உணவுத் திருவிழா போட்டிகள் நடைபெற உள்ளதாக திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார். கிராமப்புறங்களில் வாழும் குழந்தை கள், வளரிளம் பருவத்தினர், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் முதி யோர் ஆகியோருக்கு போதிய ஊட்டச் சத்து விழிப்புணர்வு இல்லாமல் பல வித நோய்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக இரத்த சோகையினால் பாதிக்கப்படுகின்றனர். இவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் உணவு, ஊட்டச்சத்து, உடல் நலம், தன் சுத்தம் மற்றும் சுகாதாரம் பேணுதல் திட்டத்தின் மூலம் இரத்த சோகை இல்லாத கிராமமாக மாற்ற சிறப்பு பிரச்சாரம், சிறு தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்து விழிப்பு ணர்வு போட்டிகள் நடத்திடவும் பாரம்பரிய உணவு வகைகளின் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில், வட்டாரம், கிராம ஊராட்சி மற்றும் மாவட்ட அளவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடை பெற உள்ளது. அதன்படி, ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டிகள், திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி அளவில் 306 ஊராட்சிகளில் செப்.9 முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.300, இரண்டாம் பரிசாக ரூ.200, மூன்றாம் பரிசாக ரூ.100 வழங்கப்படவுள்ளது. வட்டார அளவிலான போட்டிகள் 14 வட்டங்களில் செப்.16 முதல் 20 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.2,500, இரண்டாம் பரிசாக ரூ.2,000, மூன்றாம் பரிசாக ரூ.1,500 மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். மாவட்ட அளவில் செப்.25ம் தேதி அன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000, இரண்டாம் பரிசாக ரூ.4000, மூன்றாம் பரிசாக ரூ.3,500 வழங்கப்படும். மேலும், 2 நபர்களுக்கு தலா ரூ.2,500 வீதம் சிறப்பு பரிசு, 3 நபர்களுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.2000, சான்றிதழ்களும் வழங்கப் பட உள்ளன. இது தொடர்பான விவரங்களை அந்தந்த வட்டார இயக்க மேலாளர்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ள லாம் என்று ஆட்சியர் பூங்கொடி தெரி வித்துள்ளார்.