districts

உடுமலை: முழு நேரமாக மாற்றப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகம்

உடுமலை, ஜன.6-  உடுமலையில் பகுதி நேர அலுவலகமாக இருந்த வட் டார போக்குவரத்து அலுவலகம் முழு நேர அலுவலகமாக மாற்றப்பட்டது.  உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளுக்கான வட் டார போக்குவரத்து அலுவலகம் ஏலையமுத்தூர் பிரிவில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு எதிரே, பகுதி நேர அலுவல கமாக பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. இந்த அலுவல கத்தில் வாகனங்களுக்கு பதிவு எண் மற்றும் ஓட்டுநர் உரிமம் வழங்க பதிவு செய்யும் பணி மட்டுமே நடைபெறும். அதற் கான ஒப்புதலை தரும் உரிமம் தாராபுரம் வட்டார போக்குவ ரத்து அலுவலகத்தின் கட்டுபாட்டில் இருந்து வந்தது. இத னால் பொதுமக்கள் தங்களின் வாகன சான்றிதழ் மற்றும்  ஓட்டுநர் சான்றிதழ்களை பெற இரண்டு நாட்கள் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் உடுமலை வட்டார போக்குவ ரத்து அலுவலகத்தை முழு நேர அலுவலகமாக மாற்ற வேண் டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது உடுமலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முழுநேர அலுவலகமாக செயல்படும் என அறி விக்கப்பட்டுள்ளதால் உடுமலை மற்றும் மடத்துகுளம் பகுதி  பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.