தூத்துக்குடி, ஜன. 12 தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சித் திட்டங்களில் நிலுவை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்கா ணிப்புக் குழுக் கூட்டத்தில் கனிமொழி எம்பி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் / மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்கா ணிப்புக் குழு தலைவர் கனிமொழி கருணாநிதி தலைமையில் நடை பெற்றது. சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சி யர் மற்றும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண் காணிப்புக் குழு உறுப்பினர் - செய லர் கி.செந்தில்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கூட்டத்தில் கனிமொழி எம்பி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணை ப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடத்துவதன் நோக்கம் அரசின் திட்டங்கள் அனைவ ருக்கும் முறையாக கிடைப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும், அதற்கு தேவையான நடவ டிக்கைகள் மேற்கொள்வதற்கும் வாய்ப்பாக உள்ளது. ஆய்வுக் கூட்டத்திற்கு வரும் அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்த பணிகள் எந்த அளவிற்கு முடிக்கப் பட்டுள்ளது. நிலுவை பணிகளை எப்படி விரைவாக முடிப்பது என்பதை அறிந்து அதற்கான நட வடிக்கைகளை சம்பந்தப்பட்ட வர்கள் எடுக்க வேண்டும். அப் பொழுதுதான் அரசின் நோக்கங் களை அறிந்து திட்டங்களை செயல்படுத்த முடியும். மக்களுக் கான திட்ட பணிகளை விரைந்து செய்து முடிப்பதற்கு அனைவ ரும் இணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். ஆய்வுக் கூட்டத்தில் தூத்துக் குடி மாவட்ட வருவாய் அலகில் வருவாய்த்துறையில் பணி புரிந்து பணியிடையில் காலஞ் சென்ற அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்கள் 3 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் / மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண் காணிப்புக் குழு தலைவர் கனி மொழி கருணாநிதி வழங்கினார். கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பி னர்கள் ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), எம்.சி.சண் முகையா (ஓட்டப்பிடாரம்), கூடுதல் ஆட்சியர் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்கு நர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.