மதுரை, பிப். 5- உள்ளாடைகளை கழட்டி காட்டி பெண் காவலரிடம் தகராறு செய்ததாக கைது செய்யப்பட்ட தஞ்சை மாவட்ட இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் குபேந்திரனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகில் கடந்த மாதம் 7ஆம் தேதி இரவு பெண் காவலர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது ரயில்வே காவல் துறையினர் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் முன்பு 3 பேர் அமர்ந்து மது அருந்தியுள்ளனர்.
இதைப் பார்த்த பெண் காவலர் கோவில் முன்பு ஏன் மது அறுந்துகிறீர்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தங்கள் உள்ளாடைகளை கழட்டி, காவ லரிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளனர். மேலும், கோவில் அருகே திடீர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பெண் காவலர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த முயன்றுள்ளனர். ஆனால், அவர்கள் காவல் துறையினரையும் தரக்குறைவாக பேசியுள்ளனர்.
இதையடுத்து பெண் காவலரை தரக்குறைவாக திட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததாக 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். காவல் துறையினர் விசாரணையில் குபேந்திரன் இந்து முன்னணி மாவட்டச் செயலாளர் என்பதும், அவரது சகோதரர் ரவி மற்றும் முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் அந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் மீண்டும் குபேந்திரன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீதான விசாரணை திங்களன்று (பிப். 5) நடைபெற்றது.
அப்போது ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார். மேலும் சமூகத்தில் இந்து முன்னணி என்றால் ஒரு காலத்தில் மரியாதை இருந்தது. ஆனால் காவல் துறையே தற்போது அவர்களை பார்த்து பயப்படும் அளவிற்கு நிலை மோசமாகி விட்டது என நீதிபதி தண்ட பாணி வேதனையுடன் தெரிவித்தார்.