districts

img

நாயை விழுங்கிய மலைப்பாம்பு

மேலூர், ஜன.10- மதுரை மாவட்டம் மேலூர் அருகே கம்பூர் ஊராட்சிகுபட்ட தேனக்குடிபட்டியில் ஏழு அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று அப்பகுதியில் சுற்றிதிரிந்த நாயை லாவகமாக கவ்வி விழுங்கிவிட்டது.  நாயை விழுங்கியதால் மலைப்பாம்புவினால் நகர முடியாமல் அவ்விடத்தை விட்டு வெளியே நகர முடியாமல் கிடந்தது. தகவலறிந்து வந்த கொட்டாம்பட்டி தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் விரைந்து வந்து மலைப்பாம்பை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.