பெரியகுளம் வட்டத்தில் அரசுக்கு சொந்த மான 182.50 ஏக்கர் அரசு நிலத்தை அதிமுக பிரமுகர் ,அவரது உறவினர்கள்,அதிகாரிகளின் உறவினர் அபகரித்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில அரசுக்கு கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். பெரியகுளம் வட்டத்தில் அரசு நிலங்களை சிலர், அதிகாரிகள் துணையுடன் அதிமுக பிரமுகர் ,அவரது உறவினர்கள் ,அதிகாரிகளின் உறவினர்கள்,சோலார் கம்பெனி உரிமையா ளர்கள் முறைகேடாக பட்டா பெற்று அபகரித்தது தொடர்பாக கடந்த அக்டோபர் மாதத்தில் தீக்கதிர் நாளிதழில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. வடவீரநாயக்கன்பட்டியில் 109 ஏக்கர், தாமரைக் குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 13 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்கள் அபகரிக்கப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலங்களை அதிகாரிகள் துணையுடன் பெரிய குளம் அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் தனிநபர்கள் சிலர் அபகரித்து தங்களின் பெயரில் பட்டா பெற்றனர். இதற்கு உடந்தையாக இருந்த 2 தாசில் தார்கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மோசடியாக வழங்கப்பட்ட பட்டாக்கள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் அந்த நிலங்கள் அரசு நிலங்களாக மாற்றப்பட்டன. மேலும், பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப் கொடுத்த புகார்களின் பேரில், பெரியகுளத்தில் ஆர்.டி.ஓ.வாக பணியாற்றிய ஆனந்தி, ஜெயப் பிரிதா, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ண குமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன் ராம், சஞ்சீவ் காந்தி, நில அளவையர்கள் பிச்சை மணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவையரின் உதவியாளர் அழகர், மண்டல துணை தாசில் தாரின் உதவியாளர் ராஜேஷ் கண்ணன், நிலத்தை அபகரித்த அன்னபிரகாஷ், முத்துவேல் பாண்டியன், போஸ் ஆகிய 14 பேர் உள்பட பலர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்பு
இந்த நிலம் அபகரிப்பு சம்பந்தமாக தேனி மாவட்ட குற்றப்பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இது குறித்து கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நில அபகரிப்பு தொடர்பாக கடந்த 3 மாதங்க ளுக்கு முன்பு சார் ஆட்சியர் புகாரில் சில தினங்க ளுக்கு முன்பு மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை யினர் வழக்கு பதிவு செய்து ,தற்போது சி.பி.சி.ஐ.டி. காவல்துறை விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆரம்பம் முதலே சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் .கடந்த நவம்பர் 29 ஆம் தேதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்நிலை யில் மாநில அரசு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டதை கட்சியின் சார்பில் வரவேற்கி றோம்.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனை வரையும் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும் . அது போல வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் 109 ஏக்கர் நிலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளம் கொள்ளை யடிக்கப்பட்டது .கனிம வளத்துறையினர் சுமார் ரூ 4.13 கோடி மதிப்பிலான கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டதாக அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது .109 ஏக்கர் நிலம் தற்போது குன்றுகள் அழிக்கப்பட்டு ,குளமாக கட்சி தரு கிறது.சுமார் ரூ 100 கோடிக்கும் மேல் திருடப் பட்டிருக்கும் என பொது மக்கள் கருதுகிறார்கள் . எனவே இந்த விவகாரத்தில் தொடர்பு டைய அதிமுக பிரமுகர் ,அதிகாரிகள் அனை வரையும் சட்டப்படி கைது செய்து நடவடிக்கை எடுக்கவும், திருடப்பட்ட கனிம வளத்தின் உண்மையான மதிப்பை கண்டறிந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் . இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.