districts

img

விபத்தில் காயமடைந்து உயிர்பிழைத்த சிறுவன்: நலம் விசாரித்த முதல்வர்

சென்னை,ஜன.22- நாமக்கல் மாவட்டத்தில் சாலை  விபத்தில் மூளையில் அடிபட்டு உயிர்பிழைத்த சிறுவனிடம் போனில் முதல்வர் மு.க. ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் அடிபட்டு உயிர் பிழைத்த சிறுவனிடம் முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். அப்போது முதல்வரிடம் பேசிய அச்சிறுவனின் தாயார் தங்களது மகனை காப்பாற்றிய முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் மா.மதிவேந்தன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங், நாடா ளுமன்ற மாநிலங்களவை உறுப்பி னர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் ஆகியோர் சிறுவன் சு.வர்ஷாந்த் உடனிருந்தனர். சுற்றுலாத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் சிறு வன் வர்ஷாந்துக்கு பழங்கள், சத்துமிகுந்த உணவுப் பொருட்களை வழங்கினார்.

;