குன்னம்குளம், ஜன.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சூர் மாவட்ட மாநாட்டின் ஒரு பகுதியாக குன்னம்குளத்தில் நடைபெற்ற ‘ஒன்றியமும், கேரளாவும் மக்கள் மத்தியில் ஒரு ஒப்பீடு’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை அவர் துவக்கி வைத்து பேசினார். நாட்டில், மோடி அரசு தனியார்மயமாக்காமலின் பகுதியாக, பொது வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் அடிமாட்டு விலையில் ஒப்படைக்கிறது. பாதுகாப்புத் துறை உட்பட அனைத்தும் விற்பனைப் பொருட்கள். பிஎஸ்என்எல் மற்றும் எல்ஐசி போன்ற லாபகரமான நிறுவனங்கள் விற்கப்படுகின்றன. கோடீஸ்வரர்களின் வருவாய் வளர்ச்சியில் உலக நாடுகளை விட இந்தியா முன்னணியில் உள்ளது. அதே நேரத்தில், இந்திய நாடு வறுமையில் உள்ளது. ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதுகுறித்து பேசவில்லை. காங்கிரஸ் தொடங்கிய கொள்கைகளை பாஜக செயல்படுத்துகிறது என்றார். கேரளாவில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளுக்கு இடையூறு விளைவிக்க முடியாத நிலையில் ஐக்கிய ஜனநாயக முன்னணியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உள்ளதாக ஏ.விஜயராகவன் தெரிவித்தார். காங்கிரஸ், லீக், பிஜேபி, ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகள் ஒன்றாக நின்றாலும் வளர்ச்சியை தடுக்க முடியாது என்றும் அவர் உறுதிபட கூறினார். பெத்தானி பள்ளி கலையரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.சி.மொய்தீன் எம்எல்ஏ தலைமை வகித்தார். டாக்டர் பி.கே.பிஜு, பேராசிரியர் சி.ரவீந்திரநாத், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.எப்.டேவிஸ், பி.பி.அனூப், நகர்மன்றத் தலைவர் சீதா ரவீந்திரன் உள்ளிட்டோர் பேசினர்.