districts

img

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய  கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையை துவக்கக்கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டிசம்பர் 24  வெள்ளியன்று 11 ஆவது நாளாக போராட்டம் நடைபெற்றது. சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி, மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். வலசை, மேட்டுப்பட்டி, மந்திகுளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து ஏராளமான பெண்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.