திண்டுக்கல், மே 28- தையல் தொழிலாளர் சங்க திண்டுக்கல் மாவட்ட பேரவை நடை பெற்றது. பேரவைக்கு எம். மனோ கரன் தலைமை வகித்தார். சம்மேளன பொதுச்செயலாளர் எம். ஐடா ஹெலன், சிஐடியு திண்டுக்கல் மாவட் டச்செயலாளர் கே.ஆர்.கணேசன், மாவட்டத்தலைவர் கே.பிரபாகரன், உள்ளிட்டோர் பேசினர். பேரவையில் புதிய மாவட்ட நிர் வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாவட்டத்தலைவராக எம்.மனோ கரன், செயலாளராக ஒய்.குணசீலன், பொருளாளராக பி.ஆரோக்கியமேரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தையல் தொழிலாளர்களுக்கு இல வச மின்சாரம் கொடுக்க வேண்டும். இலவச தையல் மிசின்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.