விருதுநகர், ஆக.13- விருதுநகர் மாவட்டம் வெம்பக் கோட்டை வட்டம் ஆலங்குளத்தில் அமைந் துள்ள அரசு சிமெண்ட் ஆலைக்கு 2008 ஆம் ஆண்டு முதல் இன்று வரை தமிழக அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் அந்த நிதி யில் ஒரு பைசா கூட சிமெண்ட் ஆலைக்கு வரவில்லை. இதனால் ஆலையை நவீனப் படுத்த முடியாமல் தொடர்ந்து நலிவடைந்து கொண்டே வருகிறது. ஆலையை நவீனப்படுத்துவதற்கு தொடர்ந்து அரசு நிதி ஒதுக்கவும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவும் வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூரில் நடை பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மக்கள் கோரிக்கை மாநாட்டிற்கு வருகை தந்த மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனிடம், வெம்பக்கோட்டை ஒன்றியச் செயலாளர் முனியசாமி, ஆலை பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் கண்ணன் தலைமையில் ரமேஷ் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட மாநிலச் செயலாளர், அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறினார். நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜு ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் குருசாமி, சுந்தரபாண்டியன், பெரிய சக் கரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.