districts

img

ரயில் நிலையங்களில் பயணிகளின் வசதிகள் குறித்து ஆய்வு

மதுரை, பிப். 3-  ரயில்வே வாரிய பயணிகள் வசதிக்குழு உறுப்பினர்கள் வியாழக்கிழமையன்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்ம நாபன் அனந்த்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாத், மதுசூதனன், மும்பையைச் சேர்ந்த கை லாஷ், உத்தரகண்டைச் சேர்ந்த ராம் குமார் பகன், தெலுங்கானாவைச் சேர்ந்த உமாராணி ஆகிய ஐந்து குழு உறுப்பி னர்கள் மற்றும் குழு ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரயில் நிலை யங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள பயணிகள் வசதிகளை ஆய்வு செய்தனர்.  இந்த குழு பிப்ரவரி 28 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை மதுரை, திருநெல்வேலி, திருச்செந்தூர், தூத்துக்குடி, மானாமதுரை, பரமக்குடி, இராமநாதபுரம், இராமேஸ்வ ரம், சிவகங்கை, தேவகோட்டை ரோடு, காரைக்குடி, திண்டுக்கல், பழனி ஆகிய ரயில் நிலையங்களில் ஆய்வு மேற் கொண்டது. ரயில் நிலையங்களில் நடைமேடை, நடை மேம்பாலம், குடிநீர் குழாய்கள், கழிப் பறை, ஓய்வு அறைகள், தங்கும் அறைகள், உணவகங்கள், மின்தூக்கி, எஸ்கலேட்டர் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.  ஆய்வில் அவர்கள் கண்டறிந்த விப ரங்களை கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் விவாதித்த னர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கூடு தல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் வி.பிரசன்னா, ரயில்வே கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல்.கணேஷ் ஆகி யோரும் கலந்து கொண்டனர்.