districts

img

வாசன் கண் மருத்துவமனையில் அதிநவீன கான்டூரா விஷன் சிகிச்சை

மதுரை, செப்.9- மதுரையில் செயல்படும் வாசன் கண்  மருத்துவமனையில் பல்வேறு கண்  நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது தற்போது புதிய தொழில் நுட்பத்தில் அதிநவீன கான்டூரா லேசர் சிகிச்சை அறிமுகம் செய்யப்படுவதாக மருத்துவமனையின் முதன்மைத் தலைமை மருத்துவர் க.கமல்பாபு சனிக்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது: இன்றைய விஞ்ஞான காலத்தில் சிறு வர்கள் முதல் பெரியவர் வரை பயன்  படுத்தக் கூடிய முக்கியமான சாதனங்க ளான கைப்பேசி, கணினி, டெலிவிஷன் போன்ற தகவல் தொடர்பு சாதனங்களை ஒவ்வொருவரும் காண வேண்டிய அவ சியத்திற்குள்ளாகி வருகின்றனர். மாணவ  மாணவிகள் இணையம் வகுப்புகளுக்கு கைப்பேசிகளைத் தொடர்ந்து பயன்படுத்து வதாலும், பார்த்து வருவதாலும் கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டு கண்ணாடி  அணிய வேண்டிய அவசியம் ஏற்படு கிறது. கண்களும் ஒரு கேமராவை போன்ற  சாதனம் தான். நாம் பார்க்கும் பொருட்க ளின் வடிவமும் உருவமும் கண்ணில் உள்ள  கருவிழி வழியாக விழித்திரையில் துல்லி யமாகக் குவிந்தால் அது சரியான பார்வை யாகும் கிட்டப்பார்வை தூரப்பார்வை குறை பாடு உள்ளவர்கள் கண்ணாடி அணிய வேண்டியது அவசியமாகும். கண்ணாடி இல்லை என்றால் காண்டாக்ட் லென்ஸ் அணியலாம். காண்டாக்ட் லென்ஸ் அனை வருக்கும் பொருத்தமானதாக இருப்ப தில்லை இரு சக்கர வாகனங்களில் செல்ப வர்கள் விளையாட்டில் ஈடுபாடு உள்ள வர்கள் காண்டாக்ட் லென்ஸ் அணிவது மிகவும் சிரமமாக இருக்கிறது.  

கான்டூரா விஷன் சிகிச்சை

கான்டூரா விஷன் சிகிச்சையென்பது அதிகத் திறன் கொண்ட ஒரு லேசர் சிகிச்சை  முறையாகும். மற்ற லேசர் சிகிச்சை முறை யில் 2000 திறன் வரை லேசர் செலுத்தப்படு கிறது. கான்ட்ரோ விஷனில் 22,000 திறன் லேசர் செலுத்தப்படுகிறது. இதனால் கான்டூ ராவில் மிகத் துல்லியமான பார்வை கிடைக்கிறது ஒருவருக்கு 6/6 அளவு இருந்தால் அது சரியான பார்வையாகக் கருதப்படுகிறது.  கான்டூராவில் 6/5 விஷன் வரை கிடைக்கிறது. பார்வைக் குறைபாட்டைச் சரி செய்யும் முறைதான் கான்டூரா விஷன்  சிகிச்சை முறை. 20 வயது முதல் 40 வயது உடைய அனை வரும் தகுதியானவர்கள். கிட்டப்பார்வை, தூரப்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மட்டுமல்ல இதில் பார்வைத்திறன் குறை பாடு 12 அளவு வரை உள்ளவர்களும் சிகிச்சை பெறலாம்.ஸ்கேன் பரிசோதனை மூலம் மருத்துவர்களால் சிகிச்சை உறு திப்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.