இலங்கை கடற்படையால் இராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
இராமேஸ்வரம், ஜூலை 2- இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் இருந்து சனிக்கிழமையன்று 300 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 1800 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நள்ளிரவு கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்ருக்கும் போது 5 ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படை யினர், மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். 20-க்கும் மேற்பட்ட படகு களில் வலைகள் மற்றும் போட் பலகைகளை கடலில் வெட்டி விட்டு இலங்கை கடற்படையினர் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். சிறைப்பிடித்து சென்று விடுவார்கள் என்ற அச்சத்துடன் படகுகளுடன் மீனவர்கள் கரை திரும்பி னர். பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தாக்குதலால் படகு ஒன்றுக்கு ரூ.30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் இழப்புடன் மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பினர்.
சின்னமனூர் அருகே விபத்து கணவன்-மனைவி பலி
தேனி, ஜுலை 2- தேனி மாவட்டம், போடி தேவாரம் அருகே மல்லிங்கா புரத்தைச் சேர்ந்தவர் மாரிச்சாமி(35). சிஆர்பிஎப் எனப் படும் துணை ராணுவத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று கடமலைக்குண்டுவில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷத்திற்காக பைக்கில் தனது மனைவி சச்சிதா ரணி(27), மகன் விமல்(7) ஆகியோருடன் சென்று கொண்டி ருந்தார். வேப்பம்பட்டி பிரிவு அருகே சென்ற போது எதிரே வந்த வேன் இவர்கள் மீது மோதியது. இதில் மாரிச்சாமி, சச்சிதாரணி ஆகியோர் இறந்தனர். விமல் காயங்களு டன் தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சின்னமனூர் காவல்துறையினர் வேன் ஓட்டுநர் மலைச்சாமி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
மதுபோதையில் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டவர் கொலை மனைவி-மகன்கள் கைது
கடமலைக்குண்டு, ஜூலை 2- தேனி மாவட்டம் கண்டமனூர் அருகே கணேசபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 49). விவசாயக் கூலித்தொழிலாளி. இவரது மனைவி போதுமணி (45). இவர்களுக்கு சூர்யா (28), சுகன் (24), என்று இரண்டு மகன்களும் நாகஜோதி (22) என்ற மகளும் உள்ளனர். நாகஜோதி திருமணமாகி வெளியூரில் கணவருடன் வசித்து வருகிறார். மூத்த மகன் சூர்யா திருமணமாகி கணேசபுரத்தில் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இளைய மகன் சுகன் கோயம்புத்தூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மதுப்பழக்கத்திற்கு அடிமையான பாலமுருகன் நாள்தோறும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவி, மகனை தகாத வார்த்தைகளால் திட்டி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குடும்பத்தி னர் பலமுறை கண்டித்தும் பாலமுருகன் மதுப்பழக்கத்தை கைவிட வில்லை. இதுகுறித்து பாலமுருகனின் மனைவி போதுமணி அவரது இளைய மகனுக்கு போனில் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுகன் கணேசபுரத்திற்கு வந்துள்ளார். சனிக்கிழமை இரவு வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த பாலமுருகன், மனைவி மகன்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த மனைவி, மகன்கள் ,பாலமுருகனை தாக்கி கீழே தள்ளினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த பாலமுரு கனை 3 பேரும் சேர்ந்து கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். பின்னர் மூன்று பேரும் ஞாயிற்றுக்கிழமை காலை பாலமுருகன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம் பக்கத்தி னரிடம் கூறி நாடகமாடியுள்ளனர். தகவலறிந்த கண்டமனூர் போலீ சார் கணேசபுரத்திற்கு சென்று பாலமுருகனின் உடலை ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கழுத்து மட்டுமல்லாமல் உடலிலும் சந்தே கப்படும்படியான காயங்கள் இருந்தன. இதனால் சந்தேகமடைந்த போலீசார் பாலமுருகனின் மனைவி மற்றும் மகன்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் பாலமுருகனை கொலை செய்ததாக 3 பேரும் ஒப்புக்கொண்டனர். இதையடுத்து 3 பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விருதுநகர் விலையில் சதம் அடித்த தக்காளி, சின்ன வெங்காயம்
விருதுநகர், ஜூலை.2- விருதுநகர் காய்கறி சந் தையில் ஒரு கிலோ தக் காளி மற்றும் சின்ன வெங் காயத்தின் விலை 100 ரூபாயை தாண்டியது. இத னால், பொது மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். கடந்த சில வாரங்களாக, தக்காளி விளைச்சல் குறைவு மற்றும் சந்தைக்கு வரத்துக் குறைவு ஆகிய காரணங்களால், தக்காளி யின் விலை தொடர்ந்து அதி கரித்து காணப்படுகிறது. இந்தநிலையில், அரசு சார்பில், பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக் காளி ரூ.60 க்கு விற்பனை செய்யப்படும் என அறி விப்பு வெளியானது. ஆனால், அதற்கு போதிய பலன் கிட்ட வில்லை. அதேவேளையில் வெளி மார்க்கெட்டில் தக் காளி விலையானது கிலோ ரூ.80 வரை விற்பனை செய் யப்பட்டது. இந்நிலையில், சனி மற் றும் ஞாயிற்றுக்கிழமை களில் மீண்டும் தக்காளி விலை அதிகரித்தது. விருது நகர் காய்கறி சந்தையில் முதல் தர தக்காளியின் விலை கிலோ ரூ.100க்கும் சில்லறை விற்பனையில் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால், பொது மக்கள் தங்களுக்குத் தேவையான தக்காளிகளை குறைவான அளவே வாங்கிச் சென்ற னர். ஓட்டல்களில் தக்காளிச் சட்னி வழங்குவது உடனடி யாக நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மல்லிச் சட்னி வழங்கப்படுகிறது. இதேபோல், கடந்த வாரம் வரை ரூ.70 க்கு விற் பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலை ஞாயிறன்று ரூ.30 வரை அதி கரித்து கிலோ ரூ.100க்கு விற் கப்பட்டது. எனவே, பொது மக்கள் கிலோ ரூ.30க்கு விற் கப்பட்ட பெரிய வெங்கா யத்தை வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர். ஒரே நேரத்தில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத் தின் விலை ரூ.100ஐத் தாண் டியதால் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள் ளனர். எனவே, நியாய விலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை பொது மக்களுக்கு விநியோ கம் செய்திட வேண்டுமென வும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3.5 லட்சம் மோசடி அதிமுக மாவட்டச் செயலாளரின் சகோதரர் கைது
விருதுநகர், ஜூலை 2- அரசு வேலை வாங்கித் தருவதாக பெண் ஒருவரிடம் ரூ.3.5 லட்சம் மோசடி செய்த அதிமுக மாவட்டச் செயலா ளரின் சகோதரரை போலீ சார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே இராமுத்தேவன்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் சபா நாயகர் காளிமுத்து. இவ ரது சகோதரர் தற்போது அதி முகவின் விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச் சந்திரனின் ஆவார். மற் றொரு சகோதரர் விஜய் நல்ல தம்பி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு அதிமுகவில் வெம் பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக பதவி வகித்து வந்தார். அப்போது, கோட் டையூரை சேர்ந்த தங்கதுரை என்பவரின் மனைவி கிருஷ்ணவேணிக்கு சத்து ணவுத் திட்டத்தில் வேலை வாங்கித்தருவதாக ரூ.3.5 லட்சத்தை விஜய் நல்லதம்பி பெற்றுள்ளார். ஆனால், சொன்னபடி வேலையும் வாங்கித் தர வில்லை. பணத்தையும் திரும்பத் தரவில்லை. இது குறித்து கேட்ட கிருஷ்ண வேணிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், கிருஷ்ணவேணி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவில் புகார் அளித்தார். மேலும், அவர் பணம் கொடுக் கும் போது விஜய்நல்ல தம்பிக்கு தெரியாமல் எடுத்த வீடியோ ஆதாரத்தையும் வழங்கியுள்ளார். இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி னர். மேலும் 10 பேர் இவர் மீது பணமோசடி புகார் அளித்தனர். எனவே, மாவட்ட குற்றப்பிரிவு போலீ சார் விஜய்நல்லதம்பியை கைது செய்தனர்.
வீட்டிற்குள் வெடித்த நாட்டு வெடிகுண்டு
மதுரை, ஜூலை 2- மதுரை ஆரப்பாளையம் கண்மாய்கரை, விசு வாசபுரி - 1 வது தெரு பகுதியை சேர்ந்தவர் அஜீத் குமார். மருத்துவ பிரதிநிதியாக பணியாற்றி வரு கிறார். இவரும் அவரது மனைவியும் வெளியூர் சென்றுள்ளனர். இந்நிலையில் சனிக்கிழமையன்று இரவு திடீரென்று அஜீத்குமாரின் பூட்டிய வீட்டில் இருந்து பெரும் வெடி சத்தம் கேட்டுள்ளது.தகவல் அறிந்து வந்த போலீசார், ஆய்வு செய்த போது அங்கு நாட்டு வெடிகுண்டு வெடித்ததற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பள்ளிகள் அருகில் புகையிலை விற்றால் சட்ட நடவடிக்கை
தேனி, ஜூலை 2- கல்வி நிறுவனங்கள் அருகில் புகையிலை போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்தால் காவல்துறை யினர் மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என துணை இயக்குநர் சுகாதாரம் திரு.போஸ்கோராஜா தெரிவித் துள்ளார். பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையின் சார்பாக புகையிலை தடுப்புச் சட்டம் அமல் படுத்துவது தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் துணை இயக்குநர் சுகாதாரம் போஸ்கோ ராஜா தலைமையில் நடைபெற்றது. பள்ளிகள் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் புகை யிலைப் பொருள்கள் விற்பனைக்கு, அபராதம் விதிக்கப் பட்ட கடைகள் மீண்டும் விற்பனை செய்தால் காவல்துறை உதவியுடன் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வுள்ளது. அதன்படி தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 2022-ம் ஆண்டு முதல் ஜுன் 2023 வரை ரூ.2,12,900- அபராத மும் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைபிடிப் போருக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் இது சமூக கேடான செயல் என்று அவர்கள் உணரும் வகையில் ஆலோ சனைகளும், நலக்கல்வியும் அளிக்க இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில்காவல்துறைஅலு வலர்கள்,வருவாய்துறைஅலுவலர்கள்,பள்ளிகல்விதுறை, நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர் மருத்துவர் தினத்தில் வாழ்த்து தெரிவித்த பள்ளி மாணவர்கள்
கரும்பு சாகுபடி- குடிநீர் திட்டங்கள் நாசமாகும் அபாயம் திருப்புவனம் பெத்தானேந்தல், மணல்மேடு பகுதிகளில் மணல் கொள்ளையை தடுத்திடுக!
சிவகங்கை ஆட்சியரிடம் ஆர்.கே.தண்டியப்பன் மனு
சிவகங்கை, ஜூலை 2- சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா கானூர் ஏந்தல் , பெத்தானேந்தல். மணல்மேடு பகுதிகளில் மணல் கொள்ளை நடப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.கே. தண்டியப்பன் மனு அளித்துள்ளார். அவர் அளித்த மனுவில் மேலும் கூறி யிருப்பதாவது: மணல் கொள்ளை நடப்ப தால் இப்பகுதியில் கரும்பு சாகுபடி பாதிக் கப்படுகிறது. குடிநீர் திட்டங்கள் நாசமா கும் அபாயம் உள்ளது. மணல் கடத்தலில் ஈடுபடுகிற சமூக விரோத சக்திகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். மணல் அள்ளுவதால் இப்பகுதியில் இருக்கக்கூடிய ஆழ்குழாய் கிணறுகளில் நீர்வற்றிப் போகிறது. கூட்டுக்குடிநீர் திட்டங்களில் நீர் ஆதாரம் பாதிப்படையும் அபாயம் உள்ளது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் உரிய நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும் கிரா மங்கள், நகர்ப்புறங்களில் உயிரிழந்த வர்களின் இறப்பு சான்று பதிவு செய்யாமல் விடுபட்டுள்ளது. இறப்பு சான்று பதிவு செய்வது தொடர்பாக 3000-க்கும் மேற்பட்ட மனுக்கள் சிவகங்கை கோட்டாட்சியர் அலு வலகத்தில் தேங்கிக்கிடக்கின்றன. 3 ஆண்டுகளாக இதே நிலைமை தொடர்கி றது. இறப்பு சான்றிதழ் பெற முடியாத கார ணத்தினால் குடும்பத்துக்குள் பிரச்சனை ஏற்படுகிறது. சொத்துக்களை பிரித்துக் கொடுப்பதில் தகராறு ஏற்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலையிட்டு உடனே நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
தனியாரிடம் வழங்கிய துப்புரவு பணியை ரத்து செய்திடுக! சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம்
சிவகாசி, ஜூலை 2- துப்புரவு பணிகளை மேற்கொள்ள தனி யாரிடம் வழங்கிய ஒப்பந்தத்தை உடனடி யாக ரத்து செய்ய வேண்டும் என சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் ஏராளமான உறுப்பினர்கள் வலியுறுத்தினர். சிவகாசி மாநகராட்சி கூட்டம் மேயர் சங்கீதா இன்பம் தலைமையில் நடை பெற்றது. துணை மேயர் விக்னேஷ்பிரியா முன்னிலை வகித்தார். ஆணையாளர் சங்க ரன் வரவேற்றார். கூட்டத்தில் 29 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது நடைபெற்ற விவாதம் வரு மாறு: மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சேரும் குப்பைகளை அகற்ற ரூ.8 கோடியே 81 லட்சம் செலவில் பணி ஒதுக்கப் பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களாக இப்பணி கள் சரிவர நடைபெறவில்லை, இதனால் வார்டு பகுதியில் உள்ள பொது மக்களி டம் பதில் கூற முடியவில்லை, எனவே இந்த டெண்டரை உடனே ரத்து செய்ய வேண்டும் என மண்டல தலைவர் குருசாமி தெரிவித்தார். அத்துடன் இதற்கு ஆத ரவு தெரிவித்து 26 உறுப்பினர்களின் கை யொப்பமிட்ட கடிதத்தை மேயர் மற்றும் ஆணையாளரிடம் வழங்கினார், ஒப்பந்த பணிக்கு வந்த ஊழியர்கள் தங்குவதற்கு மாநகராட்சி சார்பில் இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடகை ஏதாவது வசூலிக்கப்படுகிறதா?. எனது வார்டு உள்பட நகர் முழுவதும் குப்பைகள் குவிந்து கிடக்கிறது என உறுப்பினர் குமரி பாஸ்கர் தெரிவித்தார், இவ்வாறு ஏராளமான உறுப்பினர்கள் தனியாரிடம் வழங்கிய துப்புரவு பணியை ரத்து செய்யக் கோரியும் சரிவர குப்பை களை அகற்றும் பணிகள் நடைபெற வில்லையெனவும் தொடர்ந்து புகார் தெரி வித்தனர்.