districts

சாத்தணி பட்டா பிரச்சனை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தலையிட வலியுறுத்தல்

சிவகங்கை, ஆக.31- சிவகங்கை மாவட்ட விவ சாயிகள் குறைதீர் கூட்டம்  ஆட்சியர் ஆஷாஅஜித் தலைமையில் சிவகங்கை யில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் வீரபாண்டி, மாவட்டச் செய லாளர் மோகன், மாவட்டப் பொருளாளர் விசுவநாதன், மாவட்டத் துணைத் தலை வர் அழகர்சாமி, தென்னை விவசாயிகள் சங்க மாநிலச்  செயலாளர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளையான்குடி தாலுகா செயலாளர் ராஜு  உட்பட ஏராளமான விவசாயி கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தமிழ்  நாடு விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் வீர பாண்டி, “காளையார்கோவில் தாலுகா சாத்தணியில் ஏழைக் குடும்பங்களுக்குக் கொடுக்கப்பட்ட பட்டாக்கள் முறைப்படி வருவாய்த் துறை பட்டாவாக மாற்றப் படாமல் உள்ளது. இதன்  காரணமாக அவர்களுக் கான இடத்தை கைப்பற்று வதற்குச் சிலர் முயல்வதா கத் தெரியவருகிறது. எனவே பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டாக் களை கணக்கில் ஏற்ற நட வடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்றார். அய்யாசாமி பேசும்போது, “கீழப்பசளை தொடக்க கூட்டுறவு வங்கி யில் நடந்துள்ள முறைகேடு  தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுத்து நகை யை இழந்து நிற்பவர் களுக்கு நகையை வழங்க வேண்டும்” என்றார். இதற்கு பதிலளித்த கூட்டுறவுத் துறை இணைப்  பதிவாளர் ஜீனு, “121 பேருக்கு நகைகள் வழங்  கப்பட்டுள்ளன. மீதமுள்ள வர்களுக்கு விரைவில் நகை கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகத் தெரிவித்தார்”.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் மோகன் பேசுகையில், “பாதரக்குடியில் கண் மாயை மூடி சாலை அமைப்  பதை ஏற்றுக் கொள்ள முடி யாது. கண்மாயை மூடி னால் 1,000 ஏக்கர் விவசா யத்திற்குத் தண்ணீருக்கு எங்கே போவது? எனக் கேள்வியெழுப்பினார். வழக்கறிஞர் கிருஷ்ணன் பேசுகையில், “சருகனி ஆற்றுப் பகுதியில் போடப் பட்டுள்ள பட்டாவை ரத்து  செய்ய வேண்டும்” என் றார்.