districts

img

பழனி கோவிலில் மாற்றுத் திறனாளிகள் முற்றுகை

பழனி, பிப்.9-  பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனத்திற்கு வந்த மாற்றுத் திறனாளிகளை கோவில் தற்கா லிக ஊழியர்கள் அவமதிப்பு செய்ததாக கூறி பழனி தேவஸ் தான தலைமை அலுவலகத்தை மாற்றுத்திறனாளிகள் முற்றுகை யிட்டனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெயந்தி, விருதுநகரை சேர்ந்த முனீஸ்வரி மற்றும் கண்பார்வை யற்ற மாற்றுத்திறனாளிகள் 3 பேர் மலைக்கோவிலுக்கு சாமி தரி சனத்திற்கு சென்றபோது காவ லர்கள் அவர்களை அவமதிக்கும் வகையில் தகாத வார்த்தைகளை பேசியதாக கூறி தேவஸ்தான  அலுவலகத்தை முற்றுகையிட்ட னர். கோவில் இணை ஆணையா ளர் நடராஜன் உடனே நடவ டிக்கை எடுப்பதாக கூறினார்.  மேலும் அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்கும் வரை மாற்றுத் திறனாளிகள் தலைமை அலு வலகத்தில் காத்திருந்தனர். நட வடிக்கை எடுத்த பின்பு போராட் டம் கைவிடப்பட்டது.