திருநெல்வேலி ,ஜூலை 8 கூலி உயர்வு வழங்கக்கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க தலைவர் ஆர்.மோகன், பொதுச்செய லாளர் மாரியப்பன் ஆகியோர் தலைமையில் தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவிடம் கோரிக்கை மனு வழங்கினர். அதில் கூறி இருப்பதாவது:- நெல்லை மாவட்டம் முழுவதும் மாநக ராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஆயி ரக்கணக்கான தூய்மை பணியாளர் கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களில் நிரந்தர பணியாளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. தினக்கூலி தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும் குறைந்தபட்ச கூலி அந்தந்த மாவட்ட கலெக்டரால் முடிவு செய்து அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கு ரூ.25 மட்டும் உயர்த்தி தினக்கூலி ரூ.436 ஆக சம்பளம் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கூலி உயர்வை ரத்து செய்து விட்டு, தினக்கூலி ரூ.600-க்கு மேல் உயர்த்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறி உள்ளனர். மனு கொடுக்கும் போது சிஐடியு தோழர்கள் உடன் இருந்தனர்.