விருதுநகர், ஆக.28- சாத்தூர் அருகே உள்ள நடுச்சூரங்குடி கிராமத்தில் கஞ்சா போதை பழக்கத் திற்கு இளைஞர்கள்- மாண வர்கள் அடிமையாகி வருவ தாகவும், இதனால், வன் முறைச் சம்பவங்கள் நடை பெறுவதாகவும் மகளிர் சுய உதவிக்குழுவினர் விருது நகர் ஆட்சியர் ஜெயசீலனி டம் மனு அளித்தனர். மனுவில், ‘‘சாத்தூர் அருகே உள்ளது நடுச்சூரங் குடி. இங்கு 500-க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள இளைஞர்கள்- மாணவர்கள் சமீப காலமாகக் கஞ்சா போதை பழக்கத்திற்கு அடி மையாகி வருகின்றனர். இப் பகுதியைச் சேர்ந்த சிலர், வெளியூரில் உள்ள கஞ்சா வியாபாரிகளுடன் தொடர்பு வைத்து கஞ்சாவை வரவ ழைத்து விற்பனையில் ஈடு பட்டு வருகின்றனர். இதனால், நடுச்சூரங்குடி யில் அடிதடி- தேவையற்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. பள்ளி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு உள்ளாகி வரு வதால் இடைநிற்றல் அதிக ரித்து வருகிறது. ஊரில் அமைதியற்றச் சூழல் உரு வாகி, பிற மாணவர்களும் கல்வி கற்பதில் சிக்கல் ஏற் பட்டுள்ளது. கல்வி-சமூகச் சூழலைக் கெடுத்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்ப தோடு, கல்வி மேம்படவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஏற்பாடு செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளனர்.