districts

img

மேற்கு கடற்கரை சாலை – ஈத்தாமொழியில் விபத்து ஏற்படுத்தும் பாலம்: சீரமைக்க கோரிக்கை

நாகர்கோவில், அக். 1- மேற்கு கடற்கரை சாலை - ஈத்தாமொழி பகுதியில் விபத்துக்க ளை ஏற்படுத்தி வரும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பழுதடைந்த பாலத்தை போர்க்கால அடிப்படையில் செப்பனிட்டுத்தர வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க குமரி மாவட்ட தலைவர் என்.எஸ்.கண்ணன் அளித்துள்ள மனுவில் கூறப் பட்டுள்ளதாவது: ராஜாக்கமங்கலம் ஒன்றியம் மேற்கு கடற்கரை சாலை செல்லும் ஈத்தாமொழி பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்த மான பாலம் உள்ளது.  இப்பாலம் வழியே பேருந்துகள், டாறஸ் லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. இதனால் பாலம் இடிந்து விழும் ஆபத்தில் உள்ளது.  இவ்வழியாக செல்லும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் பல முறை கீழே விழுந்து விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து ஏற்கனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இப்பாலத்தின் அருகே உள்ள மின் கம்பங்கள் தடையாக உள்ளது எனவும், மின்கம் பங்கள் அகற்றப்பட்டதும் பாலம் செப்பனிடப்படும் எனவும், நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்து வந்தனர்.   இந்நிலையில் கடந்த பல நாட்களுக்கு முன் பாலம் அருகே இருந்த மின்கம்பம் அகற்றப் பட்டுள்ளது. அப்படி இருந்தபோதும், பாலத்தை செப்பனிட உரிய  நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இப்பிரச்சனையில் தலையிட்டு போர்க்கால அடிப்படை யில் பழுதடைந்த பாலத்தை செப்பனிட்டுத்தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.