வண்ணார்பேட்டையில் தற்காலிக கழிப்பறைகள் சீரமைப்பு பயணிகள் புகார் தெரிவிக்க சிறப்பு வசதி
திருநெல்வேலி ,ஆக. 31- நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகு தியில் தற்காலிக பஸ் நிறுத்தங்கள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு மாநகர பகுதிகளுக்கு செல்வோர் மட்டு மின்றி மாவட்டங்களுக்குள் பல இடங்களுக்கு செல்வோ ரும் வந்து செல்கின்றனர். இங்கு பயணிகளுக்கு தற்காலிக கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவை முறை யாக பராமரிக்கப்படாததாலும், கழிவு நீர் சாலையில் சென்றதாலும் செயலற்று காணப்பட்டது. அதனை சீரமைக்க பல்வேறு தரப்பினரும் மாநகராட்சிக்கு கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து தச்ச நல்லூர் சுகாதார அலுவலர் இளங்கோ மேற்பார்வை யில் 2 தற்காலிக கழிப்பறைகளும் சீரமைக்கப்பட்டன. மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கழிவு நீர் செல்ல தனி ஓடையும் அமைக்கப்பட்டது. இதனி டையே கழிப்பிடம் தொடர்பாக குறைகள் மற்றும் ஆலோச னைகள் வழங்க அங்குள்ள ஒரு கடையில் மாநகராட்சி சார்பில் ஒரு நோட்டு ைவக்கப்பட்டுள்ளது. அதில் பயணி கள் தங்களது புகார்களை தெரிவிக்கலாம். தினமும் மாநகராட்சி அலுவலர்கள் அதனை பார்வையிட்டு தேவை யான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தெரி விக்கப்பட்டுள்ளது.
செப்.3-இல் மின்தடை ஏற்படும் இடங்கள்
திருநெல்வேலி, ஆக. 31- கல்லிடைக்குறிச்சி மின் கோட்டத்திற்கு உட்பட்ட ஓ.துலுக்கப்பட்டி, வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கடையம் ஆகிய துணை மின் நிலையங்க ளில் வருகிற 3- ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராம ரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப் பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுப் பத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி, ரெங்க சமுத்திரம், அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடை கால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்கு பாப்பன்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. அதே போல் கடையம், பண்டாரக்குளம், பொட்டல்புதூர், திருமலைய புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடா னூர், மாதாபுரம், மயிலப்பபுரம், வெங்காலிபட்டி, மேட்டூர் ஆகிய பகுதிகளில் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தக வலை கல்லிடைக்குறிச்சி மின் வினியாக செயற்பொறி யாளர் சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளார்.
பைக் விபத்தில் கல்லூரி மாணவர் பலி : மற்றொருவர் காயம்
தூத்துக்குடி, ஆக.31 தூத்துக்குடியில் பைக்குகள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு வர் படுகாயம் அடைந்தார். தூத்துக்குடி தாளமுத்து நகர் கணேச புரத்தை சேர்ந்தவர் பூபதிராஜா மகன் பால அருண் (19), இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 26 ஆம் தேதி தூத்துக்குடி ராம்தாஸ் நகரில் தனது மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த ராம்தாஸ் நகரை சேர்ந்த சுப்பையா மகன் சிவசக்தி (30) என்பவர் ஓட்டி வந்த பைக் இவர் மீது மோதியுள்ளது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில், கல்லூரி மாணவர் பால அருண் சிகிச்சை பலனின்றி செவ்வாய் இரவு உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கல்லூரி மாணவர் விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
லோடு ஆட்டோ மோதி வாலிபர் பலி: 2பேர் படுகாயம்
தூத்துக்குடி, ஆக.31 காயல்பட்டினத்தில் பைக் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் மருந்து கடை ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் காயம் அடைந்தனர். தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பெரிய நெசவு தெருவை சேர்ந்தவர் முகமது மைதீன் முபின் (25). இவர் மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் பைக்கில் காயல்பட்டினம் பழைய பி.எஸ்.என்.எல் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே வந்த லோடு ஆட்டோ இவரது பைக் மீது மோதியது. இதில் நிலைகுலைந்த முகமது மைதீன் முபினின் பைக், கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு பைக் மீது மோதி யது. இதில் முகமது மைதீன் முபின் படுகாயம் அடைந்தார். சுயநினைவற்ற நிலையில் அவர் உடனடியாக பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இந்த விபத்தில் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த உச்சினி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்துல் கனி மற்றும் கதிர்வேல் மூர்த்தி ஆகியோரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் திருச்செந்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த முகமது மைதீன் முபின் செவ்வாய் நள்ளிரவு சிகிச்சை பலனளிக்காமல் உயிரி ழந்தார். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.
கோவில்பட்டியில் புதன் முதல் ஒருவழிப் பாதை அமல்
தூத்துக்குடி ,ஆக. 31 கோவில்பட்டியில் போக்கு வரத்து நெரிசலைத் தவிர்க்க புதன்கிழமை முதல் ஒருவழிப் பாதை அமல்படுத்தப்படுகிறது. கோவில்பட்டி நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீா்வு காண்பது தொடா்பான கலந்தாய் வுக் கூட்டம் டிஎஸ்பி அலுவலகத் தில் டிஎஸ்பி கே.வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலா் நெடுஞ்செழிய பாண்டியன், அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலா ளா் ஜெகநாதன், நெடுஞ்சாலை உதவிப் பொறியாளா் விக்னேஷ், தனியார் பேருந்து- சிற்றுந்து உரி மையாளா்கள் சங்கத்தினா், ஆட்டோ ஓட்டுநா்கள் நலச் சங்கத்தி னா் உள்ளிட்டோர் கலந்து கொண்டனா். போக்குவரத்தில் மாற்றம் தூத்துக்குடி, விளாத்திகுளம், திருச்செந்தூா் ஆகிய ஊா்களி லிருந்து வரும் பேருந்துகள், எட்டய புரம் சாலை, கதிரேசன் கோயில் சாலை, பார்க் கிழக்கு சாலை வழி யாக அண்ணா பேருந்து நிலையம் செல்ல வேண்டும். கடலையூா் சாலையிலிருந்து வரும் சிற்றுந்து களை புதுரோடு நகராட்சி பள்ளி முன்பு நிறுத்தக் கூடாது. மதுரை, விருதுநகா் பகுதிகளிலிருந்து வரும் பேருந்துகள், தோட்டிலோ வன்பட்டி வழியாக ரயில் நிலை யம், புதுரோடு, எட்டயபுரம் சாலை, கதிரேசன் கோயில் சாலை, பார்க் கிழக்கு சாலை வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லலாம். அண்ணா பேருந்து நிலை யத்திலிருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்துகள், சிற்றுந்து கள் இளையரசனேந்தல் சாலை சுரங்கப்பாதை வழியாக செல்ல லாம். அங்கிருந்து வரும் பேருந்து கள், சிற்றுந்துகள் கூடுதல் பேருந்து நிலையம், இனாம்மணியாச்சி, லட்சுமி மில் மேம்பாலம் வழி யாக வர வேண்டும். நாகா்கோ வில்- திருநெல்வேலி- மதுரை மார்க்கமாக செல்லும் ஆம்னி உள்பட அனைத்து வகை பேருந்து களும் அணுகுசாலையில் நின்று செல்லாமல் கூடுதல் பேருந்து நிலையம் உள்ளே சென்று திரும்ப வேண்டும். அண்ணா பேருந்து நிலையத்தி லிருந்து புறவழிச்சாலைக்குச் செல்லும் வாகனங்கள் மட்டுமே இளையரசனேந்தல் சாலை சுரங் கப்பாதை வழியாக செல்ல அனு மதிக்கப்படும். புதன்கிழமை முதல் இந்த மாற்றம் அமலுக்கு வரும் என முடிவெடுக்கப்பட்டு அறிவிக் கப்பட்டது.
மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கான டி.முருகேசன் கமிட்டியில் கருத்து தெரிவிக்கலாம்
நாகர்கோவில், ஆக.31- மாநில கல்வி கொள்கை குறித்து கருத்து ருக்கள் மற்றும் ஆலோசனைகளை பொது மக்கள் தெரிவிக்கலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளதாவது: மாநில கல்வி கொள்கை சார்ந்து உயர்மட்ட குழு ஓய்வு பெற்ற நீதியரசர் டி.முருகேசன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வி கொள்கை சார்ந்து தங்களின் கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் தெரிவிக்கலாம். பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரி யர்கள், கல்வி தன்னார்வலர்கள், மாண வர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பி னர்கள், ஆசிரியர் கூட்டணி உறுப்பினர்கள், தனியார் பள்ளி மற்றும் உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் stateeducationpolicy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கலாம். Centre for Excellence, Building- 3ஆவது தளம் களஞ்சியம் கட்டிடம் பின்புறம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை- 600025 என்ற முகவரிக்கு கடிதம் வாயிலா கவும் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள் ளது.
பிசான சாகுபடிக்கு விவசாயிகள் தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் : துணை இயக்குனர் தகவல்
திருநெல்வேலி ,ஆக .31- நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகிற பிசான பருவத்தில் நெல், உளுந்து, மக்காச்சோளம், பருத்தி பயிர்கள் பயிரிட விவசாயிகள் தற்போது தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விதை விற்பனை நிலையங்களில் விதை வாங்கும் விவசாயிகள் கீழ்குறிப்பிட்ட வழி முறைகளை பின்பற்ற நெல்லை விதை ஆய்வு துணை இயக்குநர் ராஜ்குமார் கேட்டுக் கொண்டுள் ளார். இதுதொடர்பாக அவர் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது:- உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விற்பனை ரசீது பெற்று விதைகள் வாங்க வேண்டும். விற்பனை ரசீதில் பயிர், ரகம், குவி யல் எண், காலாவதி நாள், விற் பனையாளர் கையொப்பம் முதலிய விபரங்கள் இருக்க வேண்டும். விதைச் சிப்பத்தில் உள்ள விபர அட்டையில் குறிப்பி டப்பட்ட பயிர், ரகம், காலாவதி நாள் உள்ளிட்ட விபரங்களை சரி பார்த்து பின் வாங்க வேண்டும். நெல் மற்றும் உளுந்து பயிர்க ளில் விதைச்சான்று மற்றும் அங் கச்சான்றுத் துறையின் சான்றட்டை பொருத்திய விதைகளை வாங்கு வது சிறந்தது. விவசாயிகள் தங்க ளிடம் உள்ள சொந்த நெல் மற்றும் உளுந்து விதைகளை பயன்படுத் தும் முன்னர் மேற்படி விதைகளின் மாதிரிகளை நெல்லை விதை பரி சோதனை நிலையத்தில் மாதிரி ஒன்றுக்கு கட்டணம் ரூ.80 செலுத்தி முளைப்புத் திறன் பரிசோதனை செய்து கொள்ளலாம். தென்காசி மாவட்டத்தில் மக்காச்சோளம், பருத்தி விதை கள், விதை விற்பனை நிலையங்க ளுக்கு தற்போது வரப்பெற்றுள் ளது. திருவேங்கடம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் 14 விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு பதிவுச் சான்று மற்றும் முளைப்புத் திறன் பரிசோதனை அறிக்கை பெறப்படாத 3355 கிலோ மக்காச் சோளம் மற்றும் பருத்தி விதை குவியல்கள் மதிப்பு ரூ.12,19,000 விற்பனைக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. மேலும் அனைத்து விதை குவியல்களிலும் விதை மாதிரி எடுக்கப்பட்டு, முளைப்புத் திறன் பரிசோதனைக்கு ஆய்வ கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
பாவூர்சத்திரத்தில் இருந்து நெல்லைக்கு கூடுதல் அரசு பேருந்துகள் வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
திருநெல்வேலி ,ஆக. 31- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்துபேருந்து மூலம் ஆலங்குளம், நெல்லை, பாளை யங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு பணிக்கு சென்று வருகிறார்கள். மேலும் ஆலங்குளம், நெல்லை, பழையபேட்டை, பகுதியில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளிக் கூடங்களிலும் ஏராளமான மாணவ- மாணவி கள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நெல்லையிலிருந்து தென்காசி வரை நான்கு வழிச்சாலை அமை க்கும் பணி நடந்து வருகிறது. இதனால் அந்த சாலையில் மற்ற வாகனங்களில் பொது மக்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. இதற்கிடையே காலை நேரத்தில் தென் காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங் குளம் வழியாக நெல்லைக்கு இயக் கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும், அதிக அளவில் ஒன் டூ ஒன் பேருந்துகள் மட்டுமே இயக்கப் படுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனர். பாவூர்சத்திரம் பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தான் நெல்லை பேருந்துகள் வருகின்றன. இத னால் பயணிகள் சிரமப்படுகிறார்கள். இத னால் பாவூர்சத்திரம், ஆலங்குளத்தில் இருந்து நெல்லைக்கு செல்பவர்கள் பேருந்து கிடைக்காமல் அவதிப்பட்டு வரு கிறார்கள். பேருந்துகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பயணிகள் பேருந்துகளில் ஏற முடியாமல் சிரமப்படுகி றார்கள். எனவே காலை நேரத்தில் தென்காசி யில் இருந்து நெல்லைக்கு பாவூர்சத்திரம் ஆலங்குளம் வழியாக கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
களக்காட்டில் ஒற்றை யானை அட்டகாசம்
திருநெல்வேலி, ஆக. 31- களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் கடந்த 10 நாட்களாக ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் நள்ளிரவில் அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோவில் அருகே உள்ள விளைநிலங்க ளுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அங்கிருந்த 3 பனை மரங்களை சாய்த்து அதன் குருத்துக்களை சாப்பிட்டது. இந்த சத்தம் கேட்டு வந்த விவசாயிகள் யானையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அதனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானை நீண்டநேரம் அங்கு சுற்றி திரிந்தது. பின்னர் மலையடிவார புதர்களுக்குள் சென்று விட்டது.
கன்னியாகுமரி விரைவு ரயிலில் டிஜிட்டல் சார்ட் முறை அறிமுகம்
நாகர்கோவில், ஆக.31- ரயில்வே துறையில் தற்போது டிஜிட்டல் முறையில் பயணிகள் அட்டவணை சரிபார்க்கும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பயணச்சீட்டு பரிசோதகர்கள் இனி டேப்லெட் மூலமாக டிஜிட்டல் முறை யில் பயணிகளின் அட்டவணையை சரிபார்ப்பார்கள். இதன் மூலம் பயணச்சீட்டு பரிசோதகர்களின் பணி இனி மிகவும் எளிமையா னதாகவும், வெளிப்படை தன்மையு டனும் இருக்கும். திருவனந்தபுரம் கோட்டத்தில் முதற் கட்ட மாக 140 டிஜிட்டல் டேப்லெட்டுகள் ரெயில்வேத் துறையால் வழங்கப்பட்டு உள்ளது. இதில் நாகர்கோ வில் பணிமனைக்கு 20 டிஜிட்டல் டேப்லெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. தற்போது கன்னியா குமரி, அனந்தபுரி, குருவாயூர், தாம்பரம் ஆகிய ரயில்களில் இந்த திட்டத்தை செயல் படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து இயக்கப் படும் முக்கியமான ரயில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் என்பதால் முதலில் அந்த ரெயிலில் டிஜிட்டல் முறை அமல்படுத்தப்பட்டதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு வெகு விரைவில் அனைத்து ரெயில்களிலும் டிஜிட்டல் முறையில் பயணிகள் அட்டவணை சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவ தாகவும் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மழை விபரம்
தென்காசி ,ஆக. 31 தென்காசி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 39 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. கடையநல்லூரில் 11 மில்லி மீட்டரும் சங்கரன்கோவிலில் 6 மில்லி மீட்டரும் சிவகிரியில் 12 மில்லி மீட்டரும் தென்காசியில் 10 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது செங்கோட்டை பகுதியில் மழை பெய்யவில்லை.
விருதுநகரில் சரிவர மின் விளக்குகள் பழுது பார்க்கவில்லை நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் சரமாரி புகார்
விருதுநகர், ஆக.31- விருதுநகரில் மின் விளக்குகளை ஒப்பந்ததாரர் சரியாக பழுது பார்க்கவில்லை. இதனால், பல பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்றன என்று நகராட்சிக் கூட்டத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் புகார் தெரிவித்தனர். விருதுநகர் நகராட்சி அவசரக் கூட்டம் தலைவர் ஆர்.மாதவன் தலைமையில் நடை பெற்றது. ஆணையாளர் ஸ்டான்லிபாபு, பொறி யாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு: தனது வார்டில் குப்பைகளை அள்ள பாட்டரி வாகனம் கேட்டு பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை வழங்கவில்லை. எனவே, வெளி நடப்பு செய்கிறேன் என்று கூறி 32 வது வார்டு உறுப்பினர் கலையரசன் வெளி நடப்பு செய்தார். மின் விளக்குகளை சரியாக பழுது நீக் கம் செய்யவில்லை. இதனால் பல்வேறு பகுதி கள் இருளில் சூழ்ந்துள்ளன. வழிப் பறி சம்ப வங்கள் நடக்கின்றன என உறுப்பினர்கள் முத்துராமன், ஜெயக்குமார், பேபி, முத்துலட்சுமி ஆகியோர் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ஆணையாளர், நகராட்சி நிர்வாக ஆணையர் ஒப்பந் தத்தை ரத்து செய்யும் வரை அவர் தான் பணி செய்ய வேண்டியுள்ளது என தெரிவித் தார். ஏற்கனவே, அவர் சரியாக பணி செய்ய வில்லையென தீர்மானம் நிறைவேற்றி யுள்ளோம். அதை அனுப்பி நடவடிக்கை எடுங்கள் என உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார்.
பின்பு, அனைத்து தீர்மானங்களும் தலை வரின் முன் அனுமதி பெற்று வந்துள்ளது. பின்பு ஏன்? கூட்டத்தில் உறுப்பினர்கள் பங்கேற்க வேண்டும் எனக் கூறி ஆறுமுகம் வெளிநடப்பு செய்தார். பாதாள சாக்கடை அடைப்பு நீக்கும் வாக னங்களை சரியாக பராமரிப்பு செய்ய வேண்டும். மேலும், கழிவு நீரேற்று நிலையங்களில் ஏன்? மோட்டார் சீர் செய்யப்பட வில்லையென சிபிஎம் உறுப்பினர் ஜெயக் குமார் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த தலைவர் ,ஒரு வாரத்திற்குள் அனைத்து மோட்டார்களும் சரி செய்யப்படும் என தெரிவித்தார். அனைத்து ஆவணங்கள் முறையாக இணைத்து, சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய மனுக்கொடுத்து, பல நாட்கள் ஆகி யும் ஏன் வரவில்லையென உறுப்பினர் முத்துராமன் கேள்வி எழுப்பினார். ராவ்பகதூர் பள்ளி அருகே நல்ல நிலை யில் உள்ள கடையை ஏன்? இடிப்பதற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளீர்கள். அக்கடையின் ஏலதாரர், நீதிமன்றத்திக்கு சென்றுள் ளார். பதில் மனு தாக்கல் செய்யும் செலவை நாங்கள் ஏற்க மாட்டோம் என அதிமுக உறுப்பினர்கள் சரவணன், வெங்க டேஷ், மிக்கேல்ராஜ், வெங்கடேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆட்சேபணை செய்தனர். ஆணைக்குட்டம் குடிநீர் உப்புத்தன்மை யுடன் உள்ளது. எனவே, அதை நிறுத்தி விட்டு, ஒண்டிப்புலி பகுதியில் உள்ள குடிநீரை வழங்க வேண்டுமென உறுப்பினர் ஜெயக்குமார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், ஒண்டிப் புலி பகுதியில் இருந்து வரும் குழாய்களில் உடைப்புகள் உள்ளன. அதை சீரமைத்தவுடன் தண்ணீர் எடுத்து தரப்படும் என் றார். இவ்வாறாக விவாதம் நடைபெற்றது.
தேனி மாவட்டத்தில் கனமழை: அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
தேனி, ஆக.31- தேனி மாவட்டத்தில் கடந்த 1 வார மாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியாறு, வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு தொட ர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெரிய குளம், மஞ்சளாறு, தேவதானப்பட்டி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலை யில் மழை நீர் வெள்ளம் போல் பெருக் கெடுத்து ஓடியது. தேனி ரயில் நிலை யத்துக்குட்பட்ட தண்டவாளத்தில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது. அதை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றி பாதையை சீர மைத்தனர். முல்லைப்பெரியாறு அணை யின் நீர்மட்டம் 135.60 அடியாக உள் ளது. வரத்து 969 கன அடி. திறப்பு 1866 கன அடி. இருப்பு 6017 மி.கன அடி. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் 69.42 அடியாக உள்ளது. வரத்து 1784 கன அடி. திறப்பு 2069 கன அடி. இருப்பு 5681 மி.கன அடி. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடி. வரத்து 15 அடி. சோத்துப் பாறை நீர் மட்டம் 126.37 அடி. வரத்து 40 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 100 மி.கன அடி. மழையளவு பெரியாறு 7.2, தேக்கடி 23.8, கூட லூர் 4.6, உத்தமபாளையம் 10.7, வீர பாண்டி 8.2, வைகை அணை 3, மஞ்ச ளாறு 4, சோத்துப்பாறை 6, ஆண்டி பட்டி 7.2, அரண்மனைபுதூர் 14, போடி 3.6, பெரியகுளம் 15 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
குமரியில் எலக்டிரிக்கல் தொழிலாளர் சங்கம் உதயம்
சென்னை, ஆக.31- தமிழ்நாடு எலக்டிரிக்கல் தொழிலாளர் சங்கம் குமரியில் உதயமாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மின் ஆய்வு உரிமை பெற்றவர்கள், உரிமம் பெற்ற ஒயரிங் பணியாளர்கள், மின் விற் பனை கூடத்தில் பணியாற்றும் ஊழியர்கள், ஒளி - ஒலி அமைப்பாளர்களின் பேரவை கூட்டம் ஆகஸ்ட் 28 அன்று நாகர்கோவி லில் நடைபெற்றது. சிஐடியு மாநிலத் தலைவர்களில் ஒருவரான கே.செல்லப்பன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சங்கத்தின் மாநில அமைப்பாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பேசினர். மாவட்டக் கிளையின் தலைவராக வி.எஸ்.குமார், செயலாளராக எஸ்.விஜி, பொருளாளராக ஆர்.குமரேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டத்தில் இன்று பேரிடர் மீட்புப் பணி ஒத்திகை
தென்காசி, ஆக. 31 தென்காசி மாவட்டத்தில் வியாழக் கிழமை காலை 9 முதல் பிற்பகல் 01.30 மணி வரை கீழ்க்கண்ட ஐந்து இடங்களில் பேரிடர் காலங்களில் பேரிடரை எவ்வாறு எதிர் கொள்வது என்பது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் பேரிடர் ஒத்திகை நிகழ்வு (Mock Exercise) நடைபெறவுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்வு பேரிடர் காலத்தில் பொது மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய உறுதுணையாக இருக்கும் என்ப தால் மாநிலம் முழுவதும் இது போன்று நடைபெறவுள்ளது. எனவே ஒத்திகை நிகழ்வின் போது பொது மக்கள் அச்சப்பட தேவை இல்லை என்ற விபரம் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 1. தென்காசி வட்டம், குற்றாலம் கிரா மம், குற்றாலம்மெயின் அருவி 2. செங்கோட்டை வட்டம், இலத்தூர் கிராமம், ஆரம்ப சுகாதார நிலையம், 3. கடைய நல்லூர்வட்டம், மேலக்கடையநல்லூர் கிராமம், தாமரைக்குளம், 4. ஆலங்குளம் வட்டம், நெட்டூர் கிராமம், நெட்டூர் பெரியகுளம், 5. சங்கரன்கோவில் வட்டம், பெருமாள்பட்டி கிராமம், ராம்ராஜ் சர்ஜிக்கல் கம்பெனி ஆகிய 5 இடங்களில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சி நடை பெறுகிறது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
கதண்டு கடித்து 9 பேர் பாதிப்பு
தஞ்சாவூர், ஆக.31 - தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டை தாலுகா காவல் சரகம், சாந்தாங்காடு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை காலை நூறு நாள் வேலை திட்டத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 51 பெண்கள், அங்குள்ள தனியாருக்கு சொந்த மான கயிறு பேக்டரிக்கு எதிரில் உள்ள, வடிகால் வாய்க்காலை வெட்டி சுத்தம் செய்து கொண்டி ருந்தனர். அப்போது அங்கிருந்த தென்னை மரத்தில் கூடு கட்டியி ருந்த கதண்டு என்ற விஷவண்டு படையெடுத்து ஒவ்வொருவரையும் கடித்தது. இதில் 9 பேர் பாதிக்கப் பட்டனர். மற்றவர்கள் சுதாரித்துக் கொண்டு அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓடினர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களை, அங்கி ருந்தவர்கள் மீட்டு, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அதில் 6 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.