districts

img

குடிசையை இழந்தவர்களுக்கு நிவாரணம்

திண்டுக்கல், மே 26- திண்டுக்கல் நகர் குள்ளனம்பட்டியிலுள்ள பகத்சிங் நகரில் மருதாயி, தங்கராஜ் தம்பதியரின் குடிசை தீவிபத்து காரணமாக நாசமானது. உடமையை இழந்த அந்த தம்பதி யருக்கு மனிதாபிமானமான சேவை அடிப்படையில் இண்டியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பாக நிவாரண பொருட்கள் 25 கிலோ அரிசி, சமையல் பொருட்கள், தார்ப்பாய், கொசுவலை, சுகாதாரப்பொருட்களான துண்டு, சானிடைசர், நாப்கின், முககவசம், ஆகியவற்றை அமைப்பின் துணைத்தலைவர் முனைவர் சரவணன் வழங்கினார். துணை அவைத்தலைவர் சையது அபுதா கிர், பொருளாளர் சுசிலாமேரி, நிர்வாகிகள் ஆகியோர் வழங்கினர்.