districts

img

மஸ்கட்டில் தவிக்கும் 8 மீனவர்களை மீட்க ஒன்றிய அமைச்சரிடம் உறவினர்கள் மனு

நாகர்கோவில்,  ஜூலை 13- மஸ்கட்டில் வேலை தருவதாக கூறி அழைத்து செல்லப்பட்டு அரபு முதலா ளியின் சூழ்ச்சியில் சிக்கித் தவிக்கும் 8 குமரி மாவட்ட மீனவர்களை மீட்க கன்னி யாகுமரி மாவட்ட மீன் தொழி லாளர் சங்க நிர்வாகிகளுடன் இணைந்து உறவினர்கள் ஒன்றிய அமைச்சர் பகவத் கிஷன் ராவ் கராத்திடம் மனு கொடுத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்  எம். அகமது உசேன், தமிழ்நாடு மீன் பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொது செயலாளர் எஸ் அந்தோணி, கன்னியாகுமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் அலெக்சாண்டர், பாதிக்கப் பட்ட 8 மீனவர்களின் உற வினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். சட்ட மன்ற உறுப்பினர் எம்.ஆர். காந்தி உள்ளிட்டோர் அமைச்சருடன் இருந்தனர்.