இராமநாதபுரம், மே 11- இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம்,பொட்டிதட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மக் கள் தொடர்பு திட்ட முகாம் மே 11 புத னன்று நடைபெற்றது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் , 97 பயனாளிகளுக்கு ரூ.6.42 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக பல்வேறு துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட விளக்க அரங்கத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர் லால் குமாவத் திறந்து வைத்து பார்வையிட்டார். இம்முகாமில், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் முருகன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கந்த சாமி, போகலூர் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் சத்யா முருகேசன் , பொட்டி தொட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவண குமார் உள்பட அரசு அலுவலர்கள், உள் ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.