districts

இறந்து போனவர்களுக்கு சிகிச்சை அளித்து மோசடி செய்த மோடி அரசு: இரா.முத்தரசன்

திண்டுக்கல், ஆக.31 ரமணா திரைப்படத்தில் வரும் காட்சி களைப் போலச் செத்துப் போனவர்களுக்கு  சிகிச்சை அளித்து மோசடி செய்துள்ளது ஒன்றிய மோடி அரசு என்றார் சிபிஐ மாநிலச்  செயலாளர் இரா. முத்தரசன்.  திண்டுக்கல்லில் வியாழனன்று அவர் அளித்த பேட்டி:- இந்தியா கூட்டணி கூட்டம் மும்பையில் நடைபெறுகிறது. இது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாகும். இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் கலந்து கொள்ளவுள்ளதாக அதன் தலை வர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.  நாடு ஜனநாயக பாதையிலிருந்து நழு விச் சென்று சர்வாதிகாரப் பாதையில், பாசி சப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும். நாடு  காப்பாற்றப்பட வேண்டும் என்ற உயரிய  நோக்கத்தோடு தான் இந்தியா கூட்டணி உரு வாகியிருக்கிறது. இதில் தமிழ்நாட்டின் பங்களிப்பு, குறிப்பாக மாநில முதலமைச்ச ரின் பங்களிப்பு, மகத்தானது. இந்தக் கூட்டணி அரசியல் ரீதியாக பாஜகவை எதிர்கொள்கிறது.  தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்ன தாக மோடி அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற ஆயுதங்களை எதிர்க்கட்சிகள் மீது தவறான முறையில் நிச்சயமாகப் பயன்படுத்தும். 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலையே இவர்கள் ஜனநாயக ரீதியாக நடத்து வார்களா? என்ற ஐயப்பாடு உள்ளது. திட்ட மிட்டபடி ஐந்தாண்டுகள் முடிவுற்ற பின் நடைபெறுமா? முடிவுறுவதற்கு முன்னர் நடைபெறுமா? என்ற சந்தேகங்களும், யூகங்களும் எழத் தொடங்கியுள்ளது.  2014-ஆம் ஆண்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.410. மோடி ஆட்சியில் ரூ.1100-க்கு  விற்றது. இப்போது மக்களை ஏமாற்ற ரூ.200-ஐ குறைத்துள்ளது.  சி.ஏ.ஜி. அறிக்கையைப் பார்க்கும் போது ரமணா திரைப்படம் தான் ஞாப கத்திற்கு வருகிறது. 7000-க்கும் மேற்பட்ட வர்கள் இறந்து போனார்கள். அப்படிச்  இறந்துப் போனவர்களுக்குச் சிகிச்சை  அளித்ததாக பாஜக ஒன்றிய அரசு மோசடி  செய்துள்ளது. இந்த ஊழலைத் திரைப் படத்தில் அல்ல நிஜ வாழ்கையிலேயே செய்ய முடியும் என்று மோடி நிரூபித்துள் ளார். சி.ஏ.ஜி. அறிக்கைக்கு இதுவரை மோடி எந்தப் பதிலும் சொல்லவில்லை என்றார்.