districts

img

விலைவாசி உயர்வுக்கு எதிர்ப்பு மோடிக்கு அரசுக்கு எதிராக போராட்டம்

இராமநாதபுரம்/நத்தம், மே 30- பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்தும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு ஒன்றிய அரசு மாதம் ரூபாய் 7, 500 நிவாரணம் வழங்க வேண்  டும் என வலியுறுத்தி இடதுசாரிக் கட்சிகள் இராமநாத புரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் என்.  கலையரசன், ஆர்.குருவேல், கண்ணகி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கல்யாணசுந்தரம், வான்தமிழ் இளம்பரிதி மற்றும் மாலதி, தாலுகா செயலாளர் செல்வராஜ், சிபிஐ களஞ்சியம், விசிக அற்புத குமார், சிபிஐ மாவட்ட செயலா ளர் முருகபூபதி விசிக நிர்வாகி கோவிந்தராஜ் உட்பட ஏரா ளமானோர் கலந்துகொண்டனர். நத்தம் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி, கொசவபட்டி ஆகிய  ஊர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரம்  செய்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள், ஒன்றியச் செயலாளர் வெள்ளை கண்ணன், ராஜா, பாப்பாத்தி, சின்னராஜ், சரவணன், நல்லுசாமி, செந்தமிழன்ஆகியோர் கலந்துகொண்டனர்.