ஆட்சியர் நேரில் அழைத்து பாராட்டு மதுரை, ஜூன் 7- மதுரை மாவட்டம் மேலூர் கல்வி மாவட்டத்திற் குட்பட்டது உறங்கான்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி. 836 மாணவ, மாணவிகள் படிக்கும் இப்பள்ளியில் 31 ஆசிரியர்கள் கல்வி கற்பிக் கும் பணியில் ஈடுபட்டுள்ள னர்.மேலூர் கல்வி மாவட் டத்தில் அதிக மாணவர்கள் படிக்கும் இரண்டாவது பள்ளியாக திகழ்கிறது. எனினும், இங்கு போதிய வகுப்பறை வசதிகள் இல் லாததால் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இதனை கருத்தில் கொண் டும், தாம் பணியாற்றும் பள்ளி மாணவர்களின் நலன் கருதியும் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு இப்பள்ளியின் தலைமையாசிரியர் ந.அரு ணாசலம், ரூ. 10 லட்சம் சொந்த நிதியை மாவட்ட முதன்மைக்கல்வி அலு வலர் கா.கார்த்திகா முன்னி லையில் மாவட்ட ஆட்சியர் மா.செள.சங்கீதாவிடம் காசோலையாக வழங்கி னார். தலைமையாசிரியரின் செயலை மாவட்ட ஆட்சி யர் பாராட்டினார்.